Saturday, July 18, 2009

நகைச்சுவை தொகுப்பு - 4

1) பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!

2) காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?

3) அம்மா: என் பையன் தெரியாம ஒரு காயினை முழுங்கிட்டான்!
டாக்டர்: ஒரு ருபாய் காயினா அல்லது இரண்டு ருபாய் காயினா?
அம்மா: அதுதான் தெரியாம முழுங்கிட்டான்னு சொன்னேனே!

4) என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தைய கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

அதுவா... குழந்தைய இல்லடி.. என்னதான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!

அதுக்கு சமையல் ரூம்தான் கிடைத்ததா?

என்னது? சமையல் ரூமா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?...

5) போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!

ம்ம்... எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கிறது! மாமியாரும் இருக்குறாங்க! ... அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்....

அட... எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே!?...


6) அய்யையோ... வயுத்துக்குப் பதிலா முதுகுல ஆபரேஷன் செஞ்சுட்டீங்க டாக்டர்!

யோவ்! ஒன்ன எவன்யா ஆபரேஷன் தியேடேர்ல குப்புற படுக்க சொன்னது?

7) உங்க மாமியார பிழைக்க வைக்க ரொம்ப கஷ்டப் பட்டுடேம்மா!

உங்கள யார் டாக்டர் தேவையில்லாம கஷ்டப்பட சொன்னது?

8) காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!

காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!....

காதலி: ?!?...

9) மன்னர்: என்ன மந்திரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?
மந்திரி: அது எங்கே பொழிகிறது மன்னா? மக்கள்தான் உங்களை வசைமாரி பொழிகிறார்கள்!!
மன்னர்: ?!?

10) ஒரு குளத்துல 20 எறும்புகள் குளித்துக் கொண்டு இருந்ததாம்! அப்ப ஒரு யானை டக்குனு குளத்துல குதித்ததாம். தண்ணி தெறிச்ச வேகத்துல 19 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்ததாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம். என்னன்னு கத்துச்சாம்.....?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!

எப்பூடி?.........

?

?

?

3 comments:

நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருக்கு பாஸ்

Gifariz said...

இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம். என்னன்னு கத்துச்சாம்.....?

விடாத அமுக்கு.. அமுக்கு... என்று சொன்னதாம்

Mohan said...

வாங்க நாஞ்சில் நாதம்!
வாங்க Gifarz!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!!