Thursday, December 31, 2009

விடை பெறுகிறேன், அன்பு நெஞ்சங்களே!

நான் இன்று மட்டுமே
இருப்பேன்!
என்னைப் பற்றி
கவலைப் படவேண்டாம்!
என்னைப் பற்றி
நினைக்கவும் வேண்டாம்!
நான் இது வரை
துன்பங்களும்
தொந்தரவுகளும்
கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்!
நீங்கள்
நினைத்தாலும்
வரமாட்டேன்!
எல்லோரும்
சந்தோசமா
இருங்க!

---இப்படிக்கு
>
>
>
>
>
>
>
>
>
>
>
>

>
>
>
>
>
>

>
>
>
>
>
>

>
>
>
>
>
>

2009.




அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவறுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
எல்லா வளமும், நலமும், இனிமையும், நிம்மதியும், அமைதியும் பெற்று வளமுடன் வாழ
வாழ்த்துக்கள்! இறைவன் அருள் புரிவாராக!
வாழ்க வளமுடன்!

Saturday, December 12, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 14-12-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

2) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

3) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

4) ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

5) என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கைய இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!

6) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

7) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை
எடுத்துவிட்டுப் பாருங்கள்!
டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

8) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

9) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

10) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

11) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

12) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

13) காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

14) மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

15) அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

16) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

17) டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

18) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

19) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

20) கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....


கலக்கல் தொடரும்...

Wednesday, December 9, 2009

போலியான தகவல்கள் மூலம் வெளிநாடு செல்லாதீர் (50-வது பதிவு)



வருகை புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! இது என்னுடைய 50 - வது பதிவு. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வலைப் பக்கத்தை துவக்கினேன். நண்பர் கணேஷ்(http://sellursingam.blogspot.com/) தான் இந்த வலைப் பக்கத்தை துவக்க வழி காட்டினார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நண்பர் டவுசர் பாண்டி (http://www.athekangal.blogspot.com/) தான் முதன் முதலில் நண்பராக இந்த வலைப் பதிவின் மூலம் நெருங்கிய நண்பரானார். இது வரை ஒரு முறை கூட அவரை சந்திததில்லை. அவருடைய சென்னை தமிழின் நடையை ரசித்து நண்பரானேன். அவருக்கும் மிக்க நன்றி.

என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக்கொண்டு பின் தொடர்பவர்களாக இணைத்துக்கொண்ட அனைத்து நல் இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வருகை புரிந்தும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டும், எனது பதிவுகளுக்கு வாக்களித்து ஊக்கப்படுத்திகொண்டும் இருக்கின்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். உங்களின் ஆதரவுடன் என் வலைப்பயணம் தொடரும் என நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்!

போலியான தகவல்கள் மூலம் வெளிநாடு செல்லாதீர்



படிக்காத பாமரர் முதல் மிகவும் படித்த நபர்கள் வரை வெளி நாட்டில் வேலை பார்க்கும் மோகம் இன்று வரை அதிகமாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நன்மை தீமைகள் இருக்கிறது என்றாலும், இதில் உள்ள ஆர்வம் பலருக்கும் குறைவதில்லை. இங்கே நாம் அலசப்போவது வெளி நாடுகளுக்கு செல்லுவதை குறை கூற அல்ல, ஆனால் எப்படியாவது வெளி நாட்டில் வேலை கிடைத்து சென்றால் போதும் என்று தவறான தகவல்களை கொடுத்து செல்வதில் உள்ள பாதகத்தை கூறத்தான் இந்தபதிவு.

நீங்கள் எந்த சட்ட மீறல்களையும் செய்யலாம், பிரச்னை வராதவரை. ஆனால் பிரச்னை என்று வந்து விட்டால் அவ்வளுவுதான், நீங்கள் தொலைந்தீர்கள், இதுவரை நீங்கள் செய்துவந்த எல்லா சட்ட மீறல்களும் நோன்டி ஆராயப்பட்டு, வசமாக சிக்கிக்கொல்வீர்கள். உதாரணமாக சமீபத்தில் ஒரு பள்ளி வேன் விபத்துக்குள்ளானபோது, அந்த பள்ளி நிர்வாகத்தால் செய்யப்பட்ட அனைத்து அத்துமீறல்களும் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த வேன் மட்டும் பிரச்னை இல்லை, அந்த பள்ளி உரிமத்தைக் கூடப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. அந்த பள்ளி மட்டுமல்ல, பல பள்ளிகளின் வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. யோசித்துப் பாருங்கள், அந்த ஒரு பள்ளியின் வேன் மட்டும் அன்று விபத்திற்குள்ளாகாமல் இருந்திருந்தால், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இத்தனை சட்ட மீறல்களும் அரங்கேறி கொண்டு இருந்திருக்கும். என்னடா, வெளி நாடு அது இது என்று சொல்லிவிட்டு சம்பந்தம் இல்லாமல் இதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள், இருக்கிறது.

இது போலத்தான் நீங்கள் போலியான தகவல் மூலம் வெளிநாடு செல்லும்போதும் ஏற்படுகிறது. எந்த பிரச்னையும் ஏற்படாதாவரை ஒன்றும் இல்லை, ஆனால் பிரச்னை என்று வந்துவிட்டால், பின் மிகப் பெரிய சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும், நீங்கள் மட்டுமல்ல, இங்குள்ள உங்கள் குடும்பமும்.

சமீபத்தில், ஒரு மத்திய இணை அமைச்சர் ஒரு அலுவலக ரீதியான மீட்டிங்கில் கூறியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எப்படி? இலங்கை பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி. ஒன்றும் பிரச்சனை இல்லை இதில், அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு இறக்காதவரை. இறந்து விட்டார். என்ன செய்வது? இங்குள்ள அவரின் குடும்பத்தார், அவரின் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர அரசின் உதவியை நாடி இருக்கிறார்கள். நம் அரசும் உதவ தயாராகி அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் உடலை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். பின் இலங்கை குடிமகனை (இலங்கை பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதால்) இந்தியாவிற்கு அனுப்ப எப்படி சம்மதிப்பார்கள்? யோசித்துப் பாருங்கள். இதைப் போல பல இறந்தவர்களின் உடல்கள் அது போன்ற நாடுகளில் உள்ளதாம். அனைத்துக்கும் மூல காரணம், தவறான தகவல்கள் கொடுத்து சென்றதால்.

பின் மிகப் பிரயத்தனமான முயற்சிகளின் மூலம், அந்த நாட்டு அரசு அவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப சம்மதித்தது, ஒரே ஒரு நிபந்தனையுடன். அந்த நிபந்தனைப் படி, இங்குள்ள குடும்பத்தாரின் DNA -வை அனுப்பி, இறந்தவரின் DNA வுடன் ஒப்பிட்டு அது பொருந்திப் போகும் பட்ச்சத்தில், உடலை அனுப்ப சம்மதிக்கும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், இத்தனை சிரமங்கள் தேவையா என்று. சரியான தகவல் மூலம், வெளி நாடு செல்லும் நபர்கள் பலரே, சிரமத்திற்கு ஆளாவதை செய்தித் தாள்களில் படிக்கிறோம். பின், தவறான தகவல் மூலம் செல்லும் நபர்கள் எத்தனை சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்? இங்கே நான் கூறி இருப்பது ஒரு உதாரணம் தான், இதைப் போல பல சிரமங்களை சந்திக்க நேரிடும், தவறான தகவல்கள் அளிப்பதால். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மிக கவனமுடன் நூறு சதவீதம் சரியான தகவல்களை அளித்து வெளி நாடு செல்லுங்கள்.

வாழ்க வளமுடன்!

Monday, December 7, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 07-12-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) ப்ளைட்ல போயிட்டு இருக்கும்போது, திடீரென ஒரு நபர் எழுந்து "ஹாய் ஜாக் " என்கிறார். உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....

2) மூன்று மோசமான வாழ்க்கை நிலைகள்:
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.

3) அப்பா: உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாராம், நீயும் இருக்கியே தண்டம்!
மகன்: அவர் உன் வயசுல ஜனாதிபதி ஆயிட்டார். நீயும் இருக்கியே முண்டம்!!

4) கண்டக்டர்: டிக்கெட் எடு!
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???

5) மேத்ஸ் மிராக்கில்!
111/(1+1+1) = 37
222/(2+2+2) = 37
333/(3+3+3) = 37
444/(4+4+4) = 37
555/(5+5+5) = 37
666/(6+6+6) = 37
777/(7+7+7) = 37
888/(8+8+8) = 37
999/(9+9+9) = 37

6) எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.

7) டாக்டர்! என்னோட மனைவி ஒரு லிட்டர் பெட்ரோல் குடித்து விட்டாள்! என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க! சரியாகி விடும்!!

8) தொண்டை கர கரப்பாக இருக்கிறதா? "சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க! இந்த கர அந்த கர எந்த கரையா இருந்தாலும் போய்டும்!

9) ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?" என்றது.

10) மகன்: குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா?
அப்பா: ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ வச்சிட்டு போய்டும்!
மகன்: அப்ப நீ டம்மி பீசாப்பா?
----- LKG டெரர்ஸ்

11) ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!
ஏன்?
ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!

12) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!

13) அன்று அவள் கைப் பிடிக்க என்னை கை விட்டாயே! இன்று அவள் கை விட்டவுடன் உன் கையை தாங்கிப் பிடிப்பது நான்தானே? by "GOLD FLAKE & KINGS"


14)
பத்தாவது மாடியில உட்கார்ந்து ஒருத்தன் ரொம்ப நேரமா தின்க் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்ப ஒன்னாவது மாடியில இருந்து திடிரென ஒருத்தன், "அப்துல் காதர்! உன்னோட பையன் 2- வது மாடியில இருந்து விழுந்துட்டான்" என்று கத்தினான்! உடனே தின்க் பண்ணிக்கிட்டு இருந்தவன் உணர்ச்சி வசப்பட்டு குதித்துவிட்டான். 8 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு பிள்ளையே இல்லையே.. யார சொல்றான்...7 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே... யார சொல்றான்... 4 - வது மாடிக்கிட்ட வரும்போது என் பேரு அப்துல் காதரே இல்லையே.. யார சொல்றான்! ஐயோ.... செத்தேன்!!!!!

15) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!

16) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?

17) பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )

18) லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி!
அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!
அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!

19) நண்பன் - 1: டேய்! மச்சி... உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீ தானே! எனக்கு அனுப்புடா!!
நண்பன் - 2: தோடா! எனக்கு கூடத்தான் இன்கமிங் ப்ரீ... நீ எனக்கு போன் பண்ணேன்!

20) மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!


கலக்கல் தொடரும்...

Wednesday, December 2, 2009

மன அழுத்தத்தைக் குறையுங்கள்



இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லோருக்கும் பெரும்பாலும் இருக்கும் ஒரு பிரச்சனை மன அழுத்தம் என்பது. இது அமைதியாக இருந்து நம் உடல் நலத்தை பாதிக்கக் கூடியது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இது தன் சுய ரூபத்தை காட்டும். எனவே இதை மறக்காமல் கவனத்தில் கொண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளவேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

1) நமக்காக நேரத்தை அவசியம் ஒதுக்க வேண்டும். டென்ஷன் ஏற்படும்போதும், அசதியாக இருக்கும்போது போதிய ஓய்வை வழக்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

2) நேரத்தையும், நமது வேலைகளையும் கவனமாக திட்டமிடுதல் வேண்டும்.

3) ஆரோக்கியத்தை பேண வேண்டும்.

4) பெரிய மாறுதல்களை நமது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

5) யாரிடமாவது நமது பிரச்சனைகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

6) நமது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் ஆரோக்கியமான உறவை பேண வேண்டும்.

7) நம்மை நாமே நேசிக்காவிட்டால் பின் யார் நேசிப்பது? எனவே உங்களை நீங்கள் நேசியுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

8) "முடியாது" என்பதை தேவைப்படும் பொது பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும்.

9) எதை விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

10) மன ஆரோக்கியம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் இல்லை என்பதை உணருங்கள்.

வாழ்க வளமுடன்!

Thursday, November 26, 2009

அவசியம் தினமும் பூண்டு சாப்பிடுங்கள்

நிறைய பேர் பூண்டை சாப்பிடுவதே இல்லை. சாப்பாட்டில் இருந்து கரிவேப்பிலையை நீக்கிவிட்டு சாப்பிடுவது போல், பூண்டையும் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் பூண்டின் மகத்துவத்தை உணர்ந்தால் கண்டிப்பாக இப்படி செய்ய மாட்டார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்ததை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.





என்ன, இனி பூண்டை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே?

Tuesday, November 24, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 24-11-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு. பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க, இந்த சிந்தனைய படிக்கும்போது பயன்படுத்தி இருந்தா எங்கேயோ போயிருப்பாங்க! சரி வாங்க, பார்ப்போம்!!

1) அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!
2) நைட்'ல தூக்கம் வரலையா? போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும். நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க! இதுதான் அழகுல மயங்கி விழறது!

3) குரங்குக்கும், கழுதைக்கும் என்ன வித்தியாசம்? குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும். கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும். உங்க சாய்ஸ்? ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ! இப்ப என்ன பண்ணுவ!

4) என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது. -- நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.

5) ரொம்ப த்ரில்லான ஸ்டோரி.. ஒரு மனிதன் நாடு ராத்திரியில கொஞ்சம் கூட பயம் இல்லாம காட்டுல சுத்திகிட்டு இருந்தான். ஏன் தெரியுமா? ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்? ... நோ .. நோ .. அழக்கூடாது...

6) ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட பயமா இருக்கு... ஏன் தெரியுமா? ஏன் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிரும் என்பதால்... இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க காசில்லாமல் ஐஸ் வைப்போர் சங்கம்.

7) உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே!

8) சாப்ட்வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்?
G.Mail S/o e-mail
RAM தேடிய motherboard
7GB Rainbow colony
எனக்கு 20MB உனக்கு 18MB
Program ஆயிரம்
ஒரு MOUSE -இன் கதை.
மானிட்டருக்குள் மழை
எல்லாம் PROCESSOR செயல்
நான் GRAPHIC டிசைனர்
C மனசுல C++
9) நான் காம்ப்ளான் பாய்!
நான் காம்ப்ளான் கேர்ள்!
அப்பா: என்ன கொடும சார் இது? நான் பெத்த பிள்ளைங்க எவன் பேரையோ சொல்லிக்கிட்டு திரியுதுங்க!
10) நபர் - 1 : இந்த டீ-இல் நிறம் இல்லை!
நபர் - 2 : இந்த டீ-இல் சுவை இல்லை!
நபர் - 3 : இந்த டீ-இல் திடம் இல்லை!
டீ-கடை காரர்: அது டீ-யே இல்லை. எச்சி கிளாஸ் கழுவுன தண்ணி....

11) 1MAY, 2MAY, 3MAY, 4MAY, 5MAY, 6MAY, 7MAY.....
என்ன பாக்குறிங்க? நாளைக்கு நான் ஒன்னு-மே அனுப்புலன்னு நீங்க சொல்லக் கூடாதுல்ல? அதுக்குதான்!

12) ஒரு பொண்ணு வண்டி ஓட்டுன அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க?
"PEN DRIVE" -ன்னு சொல்வாங்க!

13) எப்படி ஹெலிகாப்ட்டர் விபத்து ஏற்பட்டது?
இமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்!

14) காலேஜ் சம்பந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ்:
Class Test: சொல்லவே இல்ல...
Teaching: முடியல ...
Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result: இப்பவே கண்ண கட்டுதே...
Degree: வரும்... ஆனா வராது....

15) உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் "கொஞ்சம்" மழை பெய்கிறது... இல்லை என்றால்?.....
"நிறையவே" பெய்யும்!....

கலக்கல் தொடரும்....

Thursday, November 5, 2009

மாநில நுகர்வோர் சேவை மையம்

24 மணி நேரமும் செயல்பட கூடிய சேவை மையம் சமீபத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை நேரடியாக உதவியாளரிடம் பேசலாம். 24 மணி நேரமும் IVRS எனப்படும் சேவை மூலம் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறியலாம்.

பொது விநியோகம் சம்பந்தமான மற்றும் நீங்கள் கடைகளில் வாங்கும் பொருட்களில் ஏற்படும் குறைகளுக்கு இந்த சேவை மையத்தை தொலைபேசி, தபால் மற்றும் ஈ-மெய்ல் மூலமாக தொடர்பு கொண்டு தெருவிக்கலாம். மூன்று நாட்களில் பதில் கிடைக்கும் என அரசு சொல்கிறது.

இது சம்பந்தமாக அரசு சார்பில் வெளியான தகவல் அறிய கீழ் காணும் படங்களை க்ளிக் செய்து அறிந்து கொள்ளவும்.




குறிப்பு: இது அரசுக்கான விளம்பரம் அல்ல! நுகர்வோர்க்கான விழிப்புணர்வுக்காக!!

Saturday, October 24, 2009

விடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......

நீங்கள் ஏற்கனவே இதைப் பார்த்திருந்தாலும் பரவாயில்லை. மீண்டும் பாருங்கள். மனம் விட்டு சிரியுங்கள்! நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வ்வ்வளவு(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்கள்!!

1) "Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave."

இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) "as I want to shave my son's head , please leave me for two days.."

பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) "as I am marrying my daughter , please grant a week's leave.."

மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4) "Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return , please grant me half day casual leave"

மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5) "I am suffering from fever , please declare one-day holiday."

இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!



6) "As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"

இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) "As my headache is paining , please grant me leave for the day."

தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

8) "My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".

அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!


இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்

1) "I am enclosed herewith..."

அவரயே சேர்த்து அனுப்பறாராம்!

2) "Dear Sir: with reference to the above , please refer to my below..."

மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) "I am well here and hope you are also in the same well."

இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) "This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience , I am applying for the post.
கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு!

என்ன நண்பர்களே, படித்து ரசித்தீர்களா? சிரித்தீர்களா? என்றும் எப்பொழுதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்!!

.

Wednesday, October 21, 2009

ஓவியங்களை மீண்டும் மீண்டும் பாருங்கள்!

சாதரணமாக நாம் கண்ணால் பார்ப்பதை நம்புவோம்.. இந்த படங்களை மீண்டும் மீண்டும் பாருங்கள். அற்புதமான படைப்புத் திறன்...

வினோதமான நடக்கும் பசு
இந்தப் படத்தை குடிக்கும் போது பார்க்க வேண்டாம்!



உங்களால் பத்து முகங்களைப் பார்க்க முடிகிறதா?




ஒரு முகம் உள்ளது. உங்களால் பார்க்க முடிகிறதா?




உங்களால் ஒரு குழந்தையைப் பார்க்க முடிகிறதா?



முத்தம் கொடுத்துக்கொள்ளும் ஜோடியைப் பார்க்க முடிகிறதா?



மூன்று பெண்களைப் பார்க்க முடிகிறதா?



தவளைக்கும், குதிரைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?








Wednesday, September 30, 2009

கணினிகளில் சக்தியை (எனர்ஜி) சேமிக்கும் வழிகள்

The Climate Savers Computing Initiative (CSCI) எனும் அமைப்பு ஒரு லாப நோக்கமில்லாத அமைப்பாகும். இந்த அமைப்பு புதிய மற்றும் மரபுசாரா புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சகத்துடன்(Ministry of New and Renewable Energy) இணைந்து சேவையாற்றி வருகிறது. அவை எல்லா கணினி பயன்பாட்டார்களையும் தங்கள் கணினிகளில் பவர் மேனஜ்மென்ட் செட்டிங்க்ஸ் செய்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறது

கணினிகளில் நாம் பவர் மேனேஜ்மென்ட் (Power management) எனும் ஆப்ஸனை பயன்படுத்தி ஸ்லீப் மோடில் தானாக இயங்கும்படி வைத்து விட்டால் ஒரு கணினி ஒரு வருடத்தில் 296KWh மேலும் 196 Kg Co2 (கரியமில வாயு) அளவுள்ள சக்தி சேமிக்கப்படும். அது 19 நாட்கள் நீங்கள் உங்கள் காரை ஒட்டாமல் இருப்பதற்கு சமம்.

கடந்த காலங்களை விட 4.1 மில்லியன் டெஸ்க்‌டாப் கணினிகளும், 2.4 மில்லியன் நோட்‌புக் கணினிகளும் அதிகமாக 2009 ம் ஆண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் என் ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. இதுவே 2010 ம் ஆண்டு சுமார் 47 மில்லியன் கணினிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் என அதே ஆய்வறிக்கை சொல்கிறது.







கணினிகளில் பாதிக்கும் அதிகமான சக்தி வெப்பமாக(உஷ்ணமாக) வீனாதிக்கப் படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. டெஸ்க்‌டாப் கணினிகளை விட ஸர்வர் கணினிகள் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் 30 முதல் 40 சதவீதம் சக்தியை வீணடிக்கிறது. டெஸ்க்‌டாப் கணினிகள் இவ்வாறு சக்தியை வீணடிக்க மிக முக்கிய காரணம் அவை பயன்பாட்டில் இல்லாதபோது (Idle) ஸ்லீப் அல்லது ஹைபர்நேட் (Sleep or Hibernate) மோடில் தானாக இயங்கும்படி வைக்காததே ஆகும். 90 சதவீதம் கணினிகளில் இந்த ஆப்ஸன் இயக்கப்படாத (Disabled) மோடில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு சக்தி செலவாகிறது மற்றும் வீணடிக்கப்படுகிறது .

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தமது கணினிகளில் இவ்வாறு சக்தியை சேமிக்கும் வழிகள் இருப்பதை அறியாமல் உள்ளார்கள். பெரும்பாலும் நாம் காலையில் கணினியை ஆன் செய்துவிட்டு மாலையில் ஆஃப் செய்கிறோம். இடைப்பட்ட நேரங்களில் அதாவது மீட்டிங், லஞ்ச் போன்ற கணினி பயன்பாடில் இல்லாத நேரங்களில் ஒரு சில மௌஸ் க்ளிக்குகளில் நாம் பெருமளவு சக்தியை சேமிக்கலாம். சாதாரணமாக மானிட்டரையும், ஹார்ட் டிஸ்க்கையும் ஆஃப் செய்வதன்மூலமே இதை சாதிக்கலாம்.

எளிமையான ஆங்கிலத்திலே உள்ளதால் கீழே உள்ளவற்றை நீங்கள் புரிந்து கொண்டு உங்கள் கணினிகளில் பவர் மேனேஜ்மென்ட் செய்து கொள்ளமுடியும். உங்கள் கணினியில் உள்ள ஆபெரடிங் சிஸ்டம் (OS) க்கு தகுந்தாற்போல் செய்து கொள்ளுங்கள்.







How do we go for Power Management of Desktop Computer System
The following steps indicate the settings required under Windows OS:

WINDOWS 2000

Ø Go to Control Panel -à Select Power Options -à Click on Power Schemes and select Minimal Power Management option and
set the following:
o Turn off Monitor after 15 minutes
o Turn off Hard disk after 15 minutes


WINDOWS XP

Ø Go to Control Panel à Select Power Options Properties -à Click on Power Schemes and select Minimal Power Management option and
set the following:
o Turn off Monitor after 15 minutes
o Turn off Hard disk after 15 minutes
o System standby after 20 minutes
o System Hibernate after 30 minutes

OR
‐If your Keyboard has Sleep button by pressing this button the system will go to standby / hibernate mode. This may be done at any time. Sleep button function can be set as:
Ø Go to Control Panel
Ø Select Power Options Properties
Ø Click on Advanced
. When I press the power button on my computer – Set Shutdown
. When I press the sleep button on my computer – can be set as

Standby or Hibernate
Ø To bring back the system to its original state, press ’ wake up’ button. If it does not exist, press boot / power button. The system restore to the original status.


WINDOWS VISTA
Ø Go to Control Panel
Ø Power Options Properties (Power Plans) has three power plans as below:
o Balanced

. Energy Saving
. Performance

o Power Saver

. High Energy Saving
. Low Performance

o High Performance

. Low Energy Saving
. High Performance

o Select Balanced Performance & Click on Change plan settings

. Turn off display time – set – 15 minutes
. Put the computer to sleep – set – 20 minutes

o Click on change advanced power setting

. Click on change setting that are currently unavailable
Hard disk – set turn of hard disk time – 15 minutes
Sleep – set sleep time – 20 minutes
Set for hibernate after how much time – 30 minutes

OR
‐If your Keyboard has Sleep button by pressing this button the system will go to sleep /hibernate mode. This may be done at any time. Sleep button function can be set as:
Ø Go to Control Panel
Ø Select Power Options Properties (Power Plans)
.Balanced
Energy Saving
Performance
. Power Saver
High Energy Saving
Low Performance
. High Performance

• Low Energy Saving
• High Performance --> Select Balanced Performance & Click on Change plan settings
Click on change advanced power setting
• Click on Power Buttons & Lid
o Power Button action
o Sleep Button action – Set it to Sleep Mode or Hibernate
o Start Menu Power Button

Ø To bring back the system to its original state, press ’ wake up’ button. If it does not exist, by moving the mouse the system restores to the original status.

Hibernate செய்ய ஹார்ட் டிஸ்கில் அதிக அளவு ஸ்பேஸ் தேவைப்படும். எனவே நீங்கள் Standby மோடில் கூட வைத்துவிடலாம். ஒருவேளை Hibernate மோடில் வைத்திருந்தால் நீங்கள் Defragment செய்யும் முன்பு ஹைபெர்நெட் மோடை டிசேபில் (Disable) செய்துவிட்டு Defragment செய்யவும்.

நண்பர்களே உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் இதை தெரியப்படுத்தி பெருமளவு சக்தியை சேமிக்கவும், சுற்றுச் சூழல் பாதுகாக்கவும் உதவுங்கள்.

Wednesday, September 16, 2009

சுற்று சூழலை பாதுகாக்க சில வழிகள்

HP நிறுவனம் கூறும் வழிமுறைகளை கவனியுங்கள்:-
1) பிரிண்ட் எடுக்கும்போது மார்ஜின் அளவை குறைத்தால் மொத்த பக்கங்களின் அளவு மிகவும் குறையும், குறிப்பாக பெரிய டாக்குமெண்ட்களை பிரிண்ட் செய்யும்போது.

2) உங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள கணினிகளை தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.

3) கணினி அய்டில் (Idle) மோடில் இருக்கும்போது, Stand by மோடில் இருப்பதைக் காட்டிலும் 20 முதல் 50 மடங்கு அதிக அளவு சக்தி செலவாகிறது. எனவே Control Panel Power Options மெனு மூலம் கணினியின் Stand by Option - ஐ அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

4) நீண்ட நேரம் உங்களுக்கு கணினியில் வேலை இல்லாவிட்டால், Stand by அல்லது Sleep மோடில் வைக்கவும். Screen Saver வைத்திருந்தால் எடுத்து விடவும், இது அதிக சக்தியை வீணாக்குகிறது.


5) பிரிண்ட் கேட்ரிட்ஜ்ஸ் –களை மறு சுழற்ச்சிக்கு (Re Cycle) அதற்க்கென உள்ள நிறுவனங்களிடம் கொடுத்து விடுங்கள்.

6) உங்கள் பயணங்களின் போது தங்கும் அறைகளில் விளக்குகளின் பயன் நேரத்தை குறைத்து வெப்பத்தின் அளவு குறைய உதவுங்கள்.

7) உங்கள் குடும்பத்தினருடன் பேசி ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்துங்கள், இந்த பூமியை வெப்ப மயமாவதிலிருந்து தடுக்க. சிறு சிறு விசயங்கள், எடுத்துக்காட்டாக சமையலறையில் காகிதத்திற்க்கு பதிலாக துணிகளையும், காரை மழை நீரில் கழுவுவதும் இந்த பூமியைக் காக்கும்.

8) உங்கள் அன்றாட வாழ்வில் மறு சுழற்ச்சிக்கு உட்படும் கோப்பைகளையே காஃபீ-க்கு பயன்படுத்துங்கள். டிஸ்போஸெபல் (Disposable) கோப்பைகளின் பயன்பாட்டை பெருமளவு குறையுங்கள்.

9) வெப்ப அளவை குளிர் காலத்தில் ஒரு டிகிரி குறைத்தும், கோடை காலத்தில் ஒரு டிகிரி அதிகரித்தும் உங்கள் எலெக்ட்ரிஸிடீ பில்லில் 3% குறைத்துக் கொள்ளுங்கள்.

10) ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பேட்டரிகளை விட ரீசார்ஜபல் பேட்டரிகளை பயன்படுத்தி உங்கள் செலவை குறைப்பத்துடன், உங்கள் சுற்றுப்புறத்தையும் மின் கழிவுகளில் இருந்துக் காப்பாற்றுங்கள்.

11) பயன்படுத்தாதபோது தேவையற்ற விளக்குகளையும் மின் சாதனங்களையும் அணைத்து வையுங்கள்.

12) சாதாரண விளக்குகளுக்கு பதிலாக, மின்சாரத்தை சேமிக்கும் CFL போன்ற விளக்குகளை பயன்படுதுங்கள். இவை (CFL) சிறிது விலை அதிகமாக இருந்தாலும் மின்சாரத்தை பெருமளவு சேமிப்பத்துடன், நீண்ட காலமும் உழைக்கும்.

Wednesday, August 26, 2009

காலி ஜாடி மற்றும் இரண்டு கோப்பை காபி-யின் கதை

உங்களின் வாழ்க்கை 24 மணி நேரமும், நேரமின்மையால் ஒவ்வொரு செயலையும் கடினப்பட்டு சமாளிப்பதாக உணர்கிறீர்களா? 24 மணி நேரம் போதாது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு "காலி ஜாடி மற்றும் இரண்டு கோப்பை காபி-யின் கதை" உதவும்.

ஒரு பேராசிரியர் தனது தத்துவவியல் வகுப்பறையில், சில பொருட்களை தனது மேசையில் வைத்திருந்தார். வகுப்பு தொடங்கியபோது ஒரு மிகப்பெரிய காலியான ஜாடியை எடுத்து அதில் கோல்ப் பந்துகளை போட்டு நிரப்பினார். பின் மாணவர்களை நோக்கி இந்த ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது மாணவர்கள் அதை ஆமோதித்தனர். பின் அதே ஜாடியில் சிறு சிறு கூழாங் கற்களைப் போட்டு இந்த ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது அப்போதும் மாணவர்கள் அதை ஆமோதித்தனர்.

பின் கொஞ்சம் மணலை எடுத்து அதே ஜாடியில் போட்டபோது இருக்கும் இடைவெளிகளில் அந்த மணல் போய் சேர்ந்தது. மீண்டும் ஒருமுறை மாணவர்களிடம் அதே கேள்வியை அதாவது ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது அவர்கள் ஆம் என்றே சொன்னர்.

பின் பேராசிரியர் அதே ஜாடியில் இரண்டு கோப்பை காபியை ஊற்றினார். மனல்களுக்கிடையில் அந்த காபி சென்று சேர்ந்து முழுமையாக அந்த ஜாடியை நிரப்பியது. மாணவர்கள் சிரித்தனர்.


சிரித்த மாணவர்களை நோக்கி "இது உங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது" என்றார் பேராசிரியர். ஜாடியில் போட்ட கோல்ப் பந்துகள் மிக முக்கியமானது - கடவுள், குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், மிகவும் விரும்பும் பொருட்கள்... போன்றது. எல்லாவற்றையும் இழந்து, மேலே சொன்னவை மட்டுமே உங்களிம் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முழுமையானதாக இருக்கும்.

கூழாங் கற்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள வேலை, வீடு மற்றும் கார் போன்றது. மணலானது உங்கள் வாழ்க்கையில் எஞ்சி உள்ள எல்லாவற்றையும் போன்றது - மிகச் சிறியது.

அந்த ஜாடியில் முதலாவதாக மணலைப் போட்டிருந்தால் கூழாங் கற்களையோ அல்லது கோல்ப் பந்துகளையோ ஜாடியில் போட்டிருக்க முடியாது. இதுவேதான் நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். எனவே எப்போதும் உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறிய விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்றால், பின் மிக முக்கியமான விசயங்களுக்கு உங்களால் நேரம் ஒதுக்க முடியாது. ஆகவே உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதற்கான விசயங்களுக்கு நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் விளையாடுங்கள்.
உடல் நலத்தை அவ்வப்போது செக்கப் செய்யுங்கள்.
உங்கள் துணையை டின்னருக்கு வெளியே அழைத்து செல்லுங்கள்.

எப்போதும் உங்கள் இல்லத்தை சுத்தம் செய்து, தேவை இல்லாத குப்பைகளை அகற்ற கண்டிப்பாக நேரம் இருக்கும்.

கோல்ப் பந்துகளை முதலில் நிரப்ப கவனமாக இருங்கள் - மிக முக்கியமானவற்றிற்கு நேரம் ஒதுக்குவது.

உங்களுடைய முதன்மையானவற்றை அட்டவணைப் படுத்துங்கள் - மிகச் சரியாக.

மற்றவை மணலைப் போன்றது.

அப்போது ஒரு மாணவர் எழுந்து அந்த காபி எதைக் குறிக்கிறது என்று கேட்டார். பேராசிரியர் புன்முறுவலுடன் "மிக்க மகிழ்ச்சி! இந்த கேள்வியை கேட்டதற்கு" என்றார்.

உங்கள் வாழ்க்கையில் எதெதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பீர்களோ தெரியாது, ஆனால் எப்போதும் உங்கள் நண்பர்களுடன் அமர்ந்து ஒரு கோப்பை காபி அருந்த உங்களிடம் நேரம் கண்டிப்பாக இருக்கும், இதைதான் அது பிரதிபலிக்கிறது என்று சொல்லி அந்த வகுப்பை முடித்தார்.

Thursday, August 20, 2009

கணினியில் எல்லா சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருக்க

நமது கணினியில் பலவிதமான சாப்ட்வேர்களை பதிவு செய்து வைத்திருப்போம். அடிக்கடி புதிது புதிதாக நமக்கு பிடித்த சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வோம். சில சாப்ட்வேர்கள் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும். சிலவற்றை நாமாக அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.

நமது கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களுக்கும் அப்டேட் செய்ய நமக்கு ஒரு ஆலோசகர் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்தானே? நமக்கு இருக்கும் வேலைப் பளுவில் ஒவ்வொரு சாப்ட்வேர்யும் சரிபார்த்துக் கொண்டிருப்பது சாத்தியம் இல்லைதானே?

அதற்காகவே ஒரு இலவச டூல் இருக்கிறது. அதன் பெயர் செக்குனியா(Secunia). இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து வைத்து விட்டால், ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யும் நிலை வரும்போது உங்களை எச்சரிக்கை செய்து, அதற்குரிய முகவரியையும் கொடுக்கும்.

நீங்கள் இந்த டூலை இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் டாஸ்க் பாரில் கீழே படத்தில் அம்பு குறியிடப்பட்டு காட்டியபடி ஒரு ஐகான் வரும். அதை க்ளிக் செய்தால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்-களும் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.



உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களும் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருந்தால் 100 % என்றும் பச்சை நிற பாரும்(Green Bar) தெரியும் . ஒரு வேளை ஏதாவது சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் மஞ்சள் நிறமும் அதற்குரிய சதவீதமும் (96, 98, 90...) காட்டும். மிகவும் மோசமாக இருந்தால் சிவப்பு நிறத்தில் உங்களை எச்சரிக்கும்.




இன்னும் ஏன் தாமதம்? இந்த http://secunia.com/vulnerability_scanning/personal/ தளத்திளுருந்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொண்டு, உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருங்கள்!!!

Monday, August 10, 2009

சர்க்கரை நோய்(நீரிழிவு) - அறிந்துகொள்ள வேண்டியது

முன்னொரு காலத்தில் சர்க்கரை நோய் என்பது வயதான பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என இருந்தோம். ஆனால் தற்போது சர்வ சாதாரணமாக ஏழை, செல்வந்தர், இளவயது, முதுவயது என எல்லா தரப்பினரையும் இது பாதிக்கிறது என்பது உண்மை.

அதுமட்டுமல்ல. இன்னும் சில வருடங்களில் உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் சுமார் 7 கோடி பேருக்கு இந்நோய் இருக்கும் என்றும், அதற்க்கு அடுத்தப் படியாக சீனாவில் 6 கோடி பேருக்கு இந்நோய் இருக்கும் என்றும் ஒரு சமிபத்திய ஆய்வு சொல்கிறது. இன்னும் சொல்லப் போனால் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளையும் இந்த அரக்கன் விட்டு வைப்பதில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

நம் உடலில் நமக்குத் தெரியாமலேயே அமைதியாக இருந்து நம் உடலை பாதிக்கும் ஆற்றல் பெற்றது நீரிழிவு நோய்.

எனவே நீரிழவு நோய்ப் பற்றி இங்கே நான் படித்து தொகுத்தவற்றை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சர்க்கரை நோய் என்றால் என்ன?
கணையத்தில் இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபோது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிப் போவதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

அறிகுறிகள்:
உடலில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்து கொல்லும் நோய் இது. நீங்கள் ஏதேனும் ஒரு உபாதைக்கு டாக்டரிடம் செல்லும்போதுதான் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவரும். அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமான பசி எடுத்தல், எடை குறைதல் மற்றும் பாதகங்கள் மரத்து போதல் போன்றவற்றை அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

பரம்பரை நோயா?
ஆம். இது ஒரு பரம்பரை நோய் என்பதால், பெற்றோருக்கு இருக்கும் பட்சத்தில், ஒருவர் தனது 25 வயதுக்கு மேல் அறிகுறி இல்லாவிட்டாலும் நீரிழிவு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இரத்தத்தில் சர்கரையின் அளவு:

சாதரண அளவு:
சாப்பிடுவதற்கு முன்பு: 80 - 120 மில்லி கிராம்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து: 120 - 160 மில்லி கிராம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:
சாப்பிடுவதற்கு முன்பு: 130 மில்லி கிராமுக்கு கீழ்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து: 180 மில்லி கிராமுக்கு கீழ்.


பாதிக்கப்படும் உறுப்புகள்:
தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும். குறிப்பாக இதயம், சிறுநீரகங்கள், கால் போன்ற உறுப்புகள். எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திறுப்பது மிக மிக மிக முக்கியம்....

இரண்டு வகையான சர்க்கரை நோய்:
1. I.D.D.M (Insulin-dependent diabetes mellitus) டைப் 1 சர்க்கரை நோய்:
கணையத்தில் இன்சுலின் கொஞ்சம் கூட சுரக்காமல் இருக்கும் நிலையில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். இந்த வகையை சேர்ந்தவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுகொண்டிருக்கவேண்டும். பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இந்த "டைப் 1 சர்க்கரை நோய்" வருகிறது.


2. N.I.D.D.M (Non-Insulin-Dependent Diabetes Mellitus) டைப் 2 சர்க்கரை நோய்:
கணையத்தில் இன்சுலின் முழுமையாக இல்லாமல் குறைவாக சுரந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். இவர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைபடாது. தினமும் மருந்து, மாத்திரை எடுதுக்கொள்வதின் மூலமே சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்த முடியும். இதை "டைப் 2 சர்க்கரை நோய்" என்பர்.

தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள்:
1. கட்டுப்பாடான உணவுப்பழக்கம்.
2. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான இடைவெளிகளில் பரிசோதித்துக் கட்டுக்குள் வைத்திருத்தல்.
3. உடற்பருமனை தவிர்த்தல்.
4. தினமும் உடற்பயிற்சி.
5. தினமும் நடைப்பயிற்சி.
6. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை 200 மில்லி கிராமிர்க்குள் வைத்திருத்தல்.
7. மன அழுத்தம், அதிகமான கவலை இல்லாமல் மனதை ரிலாக்ஷாக வைத்துக்கொள்ளுதல்.

சர்க்கரை நோயாளிகள் சேர்த்துகொள்ளவேன்டியது:
வெண்ணெய் எடுத்த மோர்
முருங்கைக்காய்
வெந்தயம்
கடுகு
தக்காளி ஜூஸ்
பூண்டு
பச்சை காய்கறிகள்
வேள்ளெறிப் பிஞ்சு
மக்காச்சோளம்
சோளப்பொறி
முட்டைகோஸ்
கொய்யாப்பழம்
பப்பாளிப்பழம்
கொத்தமல்லி
பாகற்காய்
மிளகு
வாழைத்தண்டு
கீரை வகைகள்
பயறு வகைகள்
எலுமிச்சை
வடிகட்டிய சூப்
மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள்...

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேன்டியது:
சர்க்கரை சேர்த்த காபி, தேநீர், பால்.
சர்க்கரை
க்ளுகோஸ்
ஐஸ்க்ரீம்
மதுபானங்கள் மற்றும் புகையிலை
கேக்
தேன்
ஜெல்லி
கல்கண்டு
கிழங்கு வகைகள்
இனிப்புப் பண்டங்கள் அல்வா, புர்பிய், புட்டு, ஜாம்
பாலாடைகட்டி
வெல்லம்
சாக்லேட்
வாழைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்

கீழ் கண்டுள்ள நிலைபாடுகளின் மூலம் நீரிழிவு கட்டுப்பாடிற்குள் இருப்பதை உறுதி செய்யலாம்:

1. நீரிழிவின் அறிகுறிகள் இல்லாதிருத்தல்.
2. உடல் எடை சீராக இருத்தல்.
3. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 100 மில்லி கிராமிர்க்குள் இருத்தல்.
4. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமிர்க்குக் கீழாகவும், டிரை கிளிசரைடு 140 மில்லி கிராமிற்கு குறைவாகவும் இருத்தல்.
5. சிறுநீரில் சர்க்கரை இல்லாதிருத்தல்.



முடிந்தவரை இயற்கையுடன் இசைந்து வாழ்தலே இதுபோன்ற நோய்களை தவிர்க்க சிறந்த வழியாகும்.

Saturday, July 25, 2009

மனப்போக்கு (Attitude) மற்றும் தன்னம்பிக்கை

இது ஈ-மெயிலில் நண்பர் அனுப்பியது....... மொழிபெயர்ப்பு மட்டுமே செய்துள்ளேன்! இதைப் படித்தால் கண்டிப்பாக உங்களிடம் ஒரு தன்னம்பிக்கைப் பிறக்கும்!


1) வேலைப் போய்விட்டது.

2) சட்டசபை தேர்தலில் தோல்வி.

3) வியாபாரத்தில் தோல்வி.

4) கொடிய வியாதியால் மனைவி இறப்பு.

5) நரம்பு பாதித்த அனுபவம்.

6) சட்டசபை சபாநாயகர் தேர்தலில் தோல்வி.

7) அரசியல் கட்சியில் போட்டியிட்டு தோல்வி.

8) நில அதிகாரி பதவிக்கு மனு செய்து கிடைக்கவில்லை.

9) செனெட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.

10) துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.

11) மீண்டும் செனெட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.


பின் இரண்டு வருடம் கழித்து அமெரிக்க அதிபராக தேர்வு!

அவர்?


?

?

?

?

?

?

?

?

?

?

?





ஆபிரஹாம் லின்கன்




படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி படியுங்கள்!





இருட்டை குறை சொல்லிகொண்டிருப்பதை விட, முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்!

குறை சொல்வதை நிறுந்துங்கள்! அதற்குப் பதிலாக செயலில் இறங்குங்கள்!!


உற்சாகத்தை உருவாக்குங்கள்!

உங்கள் ஆற்றலை முழுமையாக செயலாற்றுங்கள்!!
எதிர்மறையான எண்ணங்களை அழியுங்கள்!!!

மாற்றத்தை நாமே தொடங்க முடியும்!
மேலும் மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்க முடியும்!!




Thursday, July 23, 2009

சிறப்பாக பணி செய்ய 10 ஆலோசனைகள்

இது ஈ-மெயிலில் நண்பர் அனுப்பியது....... மொழிபெயர்ப்பு மட்டுமே செய்துள்ளேன்!


1. சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள்.





2. எப்போதும் உயர்வானததற்கு குறி வையுங்கள்.





3. உங்கள் வேலையில் மிக கவனமாக இருங்கள்.






4. ஆரோக்கியத்திர்க்கு உடற்பயிற்சி தினமும் செய்யுங்கள்






5. ஒரு குழுவாக வேலை செய்ய பழகுங்கள்







6. உங்கள் நம்பிக்கையான துணையிடம் சார்ந்திருங்கள்.






7. மழைக் காலத்திற்காக சேமியுங்கள்.






8. ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுதிகொள்ளவும் தவறாதீர்கள்.






9. உங்கள் முதலாளி முன் எப்போதும் புன்னகையுடன் இருங்கள்.






10. முடியாதது எதுவுமில்லை.



Saturday, July 18, 2009

நகைச்சுவை தொகுப்பு - 4

1) பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!

2) காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?

3) அம்மா: என் பையன் தெரியாம ஒரு காயினை முழுங்கிட்டான்!
டாக்டர்: ஒரு ருபாய் காயினா அல்லது இரண்டு ருபாய் காயினா?
அம்மா: அதுதான் தெரியாம முழுங்கிட்டான்னு சொன்னேனே!

4) என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தைய கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

அதுவா... குழந்தைய இல்லடி.. என்னதான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!

அதுக்கு சமையல் ரூம்தான் கிடைத்ததா?

என்னது? சமையல் ரூமா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?...

5) போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!

ம்ம்... எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கிறது! மாமியாரும் இருக்குறாங்க! ... அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்....

அட... எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே!?...


6) அய்யையோ... வயுத்துக்குப் பதிலா முதுகுல ஆபரேஷன் செஞ்சுட்டீங்க டாக்டர்!

யோவ்! ஒன்ன எவன்யா ஆபரேஷன் தியேடேர்ல குப்புற படுக்க சொன்னது?

7) உங்க மாமியார பிழைக்க வைக்க ரொம்ப கஷ்டப் பட்டுடேம்மா!

உங்கள யார் டாக்டர் தேவையில்லாம கஷ்டப்பட சொன்னது?

8) காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!

காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!....

காதலி: ?!?...

9) மன்னர்: என்ன மந்திரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?
மந்திரி: அது எங்கே பொழிகிறது மன்னா? மக்கள்தான் உங்களை வசைமாரி பொழிகிறார்கள்!!
மன்னர்: ?!?

10) ஒரு குளத்துல 20 எறும்புகள் குளித்துக் கொண்டு இருந்ததாம்! அப்ப ஒரு யானை டக்குனு குளத்துல குதித்ததாம். தண்ணி தெறிச்ச வேகத்துல 19 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்ததாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம். என்னன்னு கத்துச்சாம்.....?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!

எப்பூடி?.........

?

?

?

Wednesday, July 8, 2009

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.


3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது.


4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த பதிவைப் படிக்கும் அன்பர்களே, கீழே உள்ள பின்னூட்டங்களையும் தயவுசெய்து படியுங்கள், சில உபயோகமான செய்திகள் உள்ளது!
நன்றி!

Monday, July 6, 2009

வண்ணங்களை ஸ்கேன் செய்யும் பேனா

ஜின்ஸன் பார்க்(Jinsun Park ) என்ற கொரிய நாட்டு நிறுவனம் கலர் பிக்கெர் (Color Picker) எனும் ஒரு பேனாவைக் கண்டுபிடித்துள்ளது. உங்களுக்கு என்ன வண்ணம் வேண்டுமோ அந்த வண்ணம் உள்ள எதாவது ஒரு பொருளின் அருகில் இந்த பேனாவை வைத்து ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். அப்போது பேனாவில் உள்ள சென்சார் மூலம் அந்த வண்ணம் அறியப்பட்டு, RGB காட்ரிட்ஜ் தேவையான வண்ண இங்க் (Ink) ஐ கலந்து கொள்கிறது. பின் நீங்கள் இந்த பேனாவை உபயோகப் படுத்தும்போது ஸ்கேன் செய்த வண்ணத்தில் எழுதவோ, வரையவோ முடியும்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
அறிவியல் தொழில் நுட்பம் எங்கோ வளர்ந்து கொண்டு போகிறது!!












Wednesday, July 1, 2009

நகைச்சுவை தொகுப்பு - 3

தொடர்ந்து சீரியசான பதிவா போட்டதால, ஒரு ஜாலிக்காக இந்த பதிவு. படித்து ரசியுங்கள். சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!!

1) ஒரு பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தா அவரை காப்பாற்றி இருக்கலாம்.
எப்படி?
டாக்டர் வீட்டுக்கு போய்ருப்பார்..

2) கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.
மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.
கணவன்: எப்படி?
மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே... இது ஒண்ணு போதாதா?

3) மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

4) மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

SMS-ல் வந்தது!

1) ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும். ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
------ பஸ் ஸ்டான்ட்ல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.

2) கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல!
மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!!

3) லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான். ----- எப்பூடி..........

4) லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும். --- வேறு எங்கும் இந்த தத்துவத்தை இதுவரை எழுதவில்லை!!

5) வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”

Friday, June 26, 2009

ஏர் கண்டிசனர் உபயோகிப்போர் கவனிக்கவும்

இன்றைய காலக்கட்டத்தில் வீடுகளிலும், அலுவலகங்கிலும், காரிலும் ஏர் கண்டிசனர் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே சமயத்தில் இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகமாகி வருகிறது. எனவே ஏர் கண்டிசனர் உபயோகிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்ததை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.