Wednesday, July 8, 2009

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.


3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது.


4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த பதிவைப் படிக்கும் அன்பர்களே, கீழே உள்ள பின்னூட்டங்களையும் தயவுசெய்து படியுங்கள், சில உபயோகமான செய்திகள் உள்ளது!
நன்றி!

20 comments:

ஆர்வா said...

மிகவும் உபயோகமான பதிவு.. தொடர்ந்து இதுபோல் உபயோகமாக எழுதுங்கள்

Unknown said...

வரவேற்க்க தக்க கட்டுரை. ஆனால் சில தவறான தகவல்களை கொண்டுள்ளது.
உதாரணமாக, 13 வது பாயிண்ட் முற்றிலும் தவறு.

14 வதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்ட பொருட்கள், புற்றுநோய் எதிர்ப்பில் ஆற்றும் பங்கு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

(http://www.cancer.gov/clinicaltrials/results/vitamin-e-whs0705)

//இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது.//

காய்கறிகளில் உரம், பூச்சிமருந்துகள்
இருப்பதும் ஆபத்தானது.



//க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்!//

வெள்ளை தேநீர் இதைவிட சிறந்தது.

கறுப்பு < பச்சை <
வெள்ளை தேநீர்

Mohan said...

வாங்க கவிதை காதலன்!
தங்கள் வருகைக்கும், உற்சாகப் படுத்தியமைக்கும் நன்றி!

வாங்க thenali!
தங்கள் வருகைக்கு நன்றி! இங்கு நான் படித்ததை தமிழாக்கம் செய்துள்ளேன்! தங்களின் விளக்கமான கருத்துரைக்கு மிகவும் நன்றி!

தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்!

Unknown said...

Excellent Blog, useful information. There is a treatment for cancer with no tablets ,injections or surgery , pls visit my blog for more details.http://technosolutionss.blogspot.com/2009/07/ceragem-miracle-treatment.html

Regards,
Prem Anand

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

geethappriyan said...

மிகவும் உபயோகமான பதிவு..
புகை பழக்கம்,மது பழக்கம்,ஏனைய புகையிலை பழக்கங்களை தவர்க்க வேண்டும்.
ac sheet கூரைக்கு கீழே வசிக்க கூடாது என்றும் சேர்த்துவிடுங்கள்.. மனசு சம்மந்தப்பட்ட நோய் என்று சொல்லி கலக்கி விட்டீர்கள்,
சிறிது புகைப்படங்களையும் சேருங்கள்.
அப்போது தான் தாக்கம் இருக்கும்
உண்மையிலேயே நல்ல பதிவு நண்பரே.
அப்புறம் கான்சரின் வலி எப்படி வலிக்கும்?என்பதையும் தேடி எழுதுங்கள்.
தலை வழியும் கைச்காளும் தமக்கு வந்தால் தான் தெரியும்,அதை சிறிது வார்த்தையிலாவது தெரிந்து கொள்ளட்டும்.

geethappriyan said...

http://geethappriyan.blogspot.com/2009/07/blog-post_06.html
சூபர் பதிவுங்க
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

Saravanan Renganathan said...

:-)
நல்ல பதிவு மோகன்

Mohan said...

வாங்க Prem!
வாங்க கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்!
வாங்க Saravanan Renganathan!
தங்கள் வருகைக்கும், உற்சாகப் படுத்தியமைக்கும் நன்றி!

*இயற்கை ராஜி* said...

உபயோகமான பதிவு..

டவுசர் பாண்டி said...

கோச்சிக்காதே , தலீவா !!! தோ, வண்டேன் ,
சோக்கா கீதுபா !!! மேட்டரு, எனுக்கு ஒலகத்திலேயே கான்செறு பேசன்ட்ட பாத்தா ரொம்ப துக்காம போயடும்பா ,

எம் பிரண்டு ஒர்த்தன் இந்த மேரி கான்சறு வந்து, டிரித்மேன்ட்டு
எட்துகினான் ,ஆனா , அதுமேரி ஒரு கொடுமே எதுமே இருக்க முடியாதுபா, கொயா வையா தாம்பா, சோத்த கர்சி ஊத்தணும் , ஐயோ !! கோராமே ,

இந்த பதிவு, கான்சறு பத்தி நாம தெரிஞ்சிகறது இல்லாம அது வராம கீரத்துக்கு , உதவட்டும். சுப்பர் பா .

Mohan said...

வாங்க இய‌ற்கை!
தங்கள் வருகைக்கு நன்றி!

வாங்க டவுசர் பாண்டி!
நீங்க சொல்றது சரிதான்! ஒரு விழிப்புனர்வுக்காகதான் இந்த பதிவு!
தங்கள் வருகைக்கு நன்றி!
அப்பப்ப தவறாம வந்து போங்க!

ivingobi said...

Very useful post... Thanks a lot....

Mohan said...

வாங்க ivingobi!
தங்கள் வருகைக்கும், உற்சாகப் படுத்தியமைக்கும் நன்றி!

Muruganandan M.K. said...

பயனுள்ள பதிவு.
கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சைகள் பல பக்க விளைவுகள் உள்ளவைதான். இருந்தபோதும் இவற்றால் பலரது நோய்களைக் குணமாக்கவும் அவர்களது வாழ்நாளை அதிகரிக்கவும் முடிந்துள்ளது. ஒவ்வொரு நாள் அதிகமாகவும் நலமாகவும் உயிர் வாழ்வதென்பது நோயாளிகளுக்கும் அவர்களது உறவினருக்கும் எவ்வளவு முக்கியமானத என்பதைக் கூறவும் வேண்டுமா?

Mohan said...

வாங்க டொக்டர்.எம்.கே.முருகானந்தன்!
தங்கள் வருகைக்கும், உற்சாகப் படுத்தியமைக்கும் நன்றி!
தங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே!

உண்மைத்தமிழன் said...

பயனுள்ள விஷயங்களைத் தொகுத்தளித்துள்ளீர்கள்..

நன்றிகள்..!

Muruganandan M.K. said...

தொடர்ந்தும் இவ்வாறான பலருக்கும் பயனளிக்கக் கூடிய பதிவுகளை இட வாழ்த்துக்கள்

Mohan said...

வாங்க உண்மைத் தமிழன்!
வாங்க டொக்டர்.எம்.கே.முருகானந்தன்!
தங்கள் வருகைக்கும், உற்சாகப் படுத்தியமைக்கும் நன்றி!

Unknown said...

மிகவும் உபயோகமான பதிவு..