Saturday, December 12, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 14-12-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

2) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

3) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

4) ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

5) என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கைய இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!

6) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

7) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை
எடுத்துவிட்டுப் பாருங்கள்!
டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

8) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

9) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

10) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

11) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

12) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

13) காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

14) மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

15) அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

16) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

17) டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

18) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

19) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

20) கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....


கலக்கல் தொடரும்...

11 comments:

டவுசர் பாண்டி said...

தல !! இன்னா மேரி கீதுபா !! இந்த தபா அது , இதுன்னு எல்லாம் இல்லை அல்லாமே சோக்கா கீது பா !! வவுறு நொந்து பூடுச்சிப்பா !! "வாழ்த்துக்கள் "

Mohan said...

வாங்க தல! சூடா கருத்தும் போட்டு, ஓட்டும் போட்டு உற்சாகப் படுத்தியதற்கு தாங்க்ஸ் தலீவா!!

டவுசர் பாண்டி said...

தல உங்க மெயில் அட்ரசு எங்கப்பா !! எனுக்கு அனப்பு என்து மெய்லு அட்ரசு xyzrajkumar@gmail .com

Mohan said...

தல! நீங்க நம்புனா நம்புங்க! நம்பாட்டிப் போங்க! நான் உங்களோட மெய்ல் அட்ரசா கேக்கலாம்னு நெனச்சேன்! நீங்க கேட்டுடீங்க! தோ உடனே உங்க ஐ.டீ.க்கு மெய்ல் போட்டறேன்!

butterfly Surya said...

super..

blogpaandi said...

:)

Mohan said...

வாங்க butterfly Surya!
வாங்க blogpaandi!

தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

Praveenkumar said...

மிகவும் அருமையான தொகுப்பு பாரட்டுகள். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் சுடச்சுட கருத்துகளும் ஓட்டுகளும் மட்டும் போட இயலவில்லை.
தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்... பகிர்வுக்கு நன்றி.

Mohan said...

வாங்க பிரவீன்குமார்!
தங்கள் வருகைக்கும், உற்சாகப்படுத்தியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
தொடர்ந்து வருகைப் புரியுங்கள்!!

நினைவுகளுடன் -நிகே- said...

சிரித்து சிரித்து வயிறே
புண்ணாகி விட்டது

Mohan said...

வாங்க நினைவுகளுடன் -நிகே!
தங்களின் வருகைக்கும், ரசிப்புக்கும் மனமார்ந்த நன்றி!