Monday, February 1, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 01-02-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...

2) பேச்சில் இனிமை, இதயத்தில் தூய்மை, கண்ணில் வலிமை, முகத்தில் பொலிவு.......
ஒரு காலை வணக்கம் சொல்ல 4 பொய் சொல்ல வேண்டி இருக்கிறது.

3) அய்யாச்சாமி: என்னுடைய பையில் என்ன இருக்கிறது என்று சொன்னால், என் பையிலிருந்து சில முட்டைகளை தருவேன். எத்தனை இருக்கிறது என்று சொன்னால், என் பையிலுள்ள 8 முட்டைகளையுமே கொடுத்து விடுவேன்.
ஜூனியர் அய்யாச்சாமி: ஏதாவது க்ளு கொடுங்கள்.

4) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

5) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...


6) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

7) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

8) அய்யாச்சாமி: சார்.. என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கஸ்டமர் கேர்: சார்.. ஜஸ்ட் 123 என்ற நம்பருக்கு போன் செஞ்சீங்கனா கரண்ட் (current) பில் தொகை தெரியவரும்....
அய்யாச்சாமி: ஹே... முட்டாள்... எனக்கு கரண்ட் பில் வேண்டாம்... மொபைல் பில்தான் வேண்டும்....

9) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

10) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?

15) அரிசிப் புட்டு, கொலாப் புட்டு, கோதுமைப் புட்டு இதை எல்லாம் சாப்பிடலாம்..ஆனால் இன்புட்...அவுட்புட்... இதை சாப்பிட முடியுமா?
----- லேப் அவர்’ல அவுட்புட் வராம பீல் பண்ணுவோர் சங்கம்...

16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...

20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...?

4 comments:

வரதராஜலு .பூ said...

:)

எல்லாமே டாப். சூப்பர்ஸ்டார் பஞ்ச் - சூப்பர் டாப்

ஜிஎஸ்ஆர் said...

நன்பா மனம் விட்டு சிரித்தேன்

சூப்பர் டூப்பர் நண்பா


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Mohan said...

வாங்க வரதராஜலு .பூ!
வாங்க ஜிஎஸ்ஆர்!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிகவும் நன்றி!

கன்கொன் || Kangon said...

கலக்கலா இருக்கு....

அசத்தீற்றீங்க போங்க....