Monday, March 29, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 29-03-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) அப்பா: பக்கத்து வீட்டுப் பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கி இருக்கா..... அவளப் பார்த்தாவது நல்லா படிடா....

மகன்: அய்யோ...அய்யோ... அவளப் பார்த்து பார்த்துத்தான் நான் படிக்காமலேப் போயட்டேன்ப்பா....

---- பிகர் பின்னாலே சுத்தி பெயில் ஆனோர் சங்கம்....

2) பையன்கள் லவ்வை சொல்லும்போது, கேர்ள்ஸ் சொல்லும் டாப் 10 வார்த்தைகள்...

1. நோ ஐடியா..

2. ப்ரண்ட்ஸ்’ஸா இருக்கலாம்...

3. செருப்பு பிஞ்சிடும்..

4. ஐ ஹேட் லவ்...

5. ஐ ஹேட் யு...

6. பேரன்ட்ஸ் திட்டுவாங்க...

7. லவ்’ல நம்பிக்கை இல்ல...

8. யோசிக்க டைம் வேணும்...

9. உன்னோட மந்த்லி இன்கம் என்ன?

10. சாரி... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்...

----- ங்கொய்யால....ரூம் போட்டு யோசிச்சுருப்பானுங்களோ?!????



3) வடிவேல்: ஹாய் உங்க டிரஸ் நல்லாருக்கு... பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்திபன்: இல்ல...

வடிவேல்: அப்புறம்?

பார்த்திபன்: எனக்கு எடுத்தது...

வடிவேல்: ?!?



4) ஆயிரமாயிரம் வருடங்கள் போய் விட்டது..

மில்லியன் கணக்கில் தியரம் சால்வ் செய்தாகிவிட்டது...

கோடிக்கணக்கில் பார்முலா கண்டுபிடித்தாகிவிட்டது...

ஆனாலும் இன்னும் X is Unknown...

இதுதாங்க வாழ்க்கை....



5) தமிழ்நாடு போலீஸ் ஸ்ட்ரெண்க்த்....

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே.....



6) ஒரு நல்ல செய்தி... நாளை மட்டும் இந்தியா முழுவதும்

BSNL TO BSNL

AIRTEL TO AIRTEL

VODOFONE TO VODOFONE

AIRCEL TO AIRCEL

Totally Free........

>

>

>

ஒரு கெட்ட செய்தி...

அது மிஸ்டு காலுக்கு மட்டும்தான் பொருந்தும்....



7) நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல் வரக்கூடாது பாருங்க....



8) ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....



9) தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....



10) சாலையில்.. ஒரு பெண்: ஸ்டுபிட்...இடியட்...நீ பைக்’ல வந்த ஸ்பீட்’ல என் மேல மோதி இருந்தா என்ன ஆகி இருக்கும்?

பையன்: நீ இவ்ளோ பேசி இருக்க மாட்ட!...



11) ஆசிரியர் போனில்: நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் இன்னிக்கு லீவ் போட்டன உங்க பையன்...

அப்பா: அடப்பாவி! நீங்க செத்துப் போயட்டாதனாலத்தான் இன்னிக்கி ஸ்கூல் லீவ்’ன்னு சொல்லி மட்டம் போட்டான்...



12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......



13) சூப்பர், ஆபர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்....

அன்பான மனைவி இருந்தா அது சூப்பர்...

அதே அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆபர்...



14) எல்லா எறும்புகளும் ஒரு சைக்கிள் ரேசில் கலந்துகொண்டன. திடீரென்று ஒரு யானை குறுக்கே புகுந்து விட்டது. அப்போது ஒரு எறும்பு சொல்கிறது... “வீட்ல சொல்லிட்டு வந்திட்டியாடா குண்டா?”...



15) ஒரு டிபிகல் இன்ஜினியரிங் கொஸ்டின்...

வாட் இஸ் தி சொல்யூசன் பார் 2+2?

A) 4

B) FOUR

C) IV

D) 4.0

இப்ப தெரியுதா? ஏன் ஸ்டுடன்ஸ் அரியர் வக்கிராங்கன்னு....



16) வடிவேல்: தம்பி! நீங்க எதோ மெசேஜ் எல்லாம் நல்லா அனுப்புரீங்கன்னு சொன்னாங்க... என்ன கார்ட் நீங்க போட்டுருக்கீங்க? ஏர்செல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: ஏர்டெல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: வோடோபோன், பீ.எஸ்.என்.எல்’ன்னு ஏதாவது கார்டா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: அப்ப என்ன கார்டுதான் போட்டுருக்கீங்க?

பார்த்திபன்: சிம்கார்ட்...

வடிவேல்: ?!?



17) பூவுக்குள்... தேன்.

நெல்லுக்குள்... அரிசி.

கடலுக்குள்....முத்து.

மண்ணுக்குள்....வைரம்.

உன் மனச தொட்டு சொல்லு.....

உன் மண்டைக்குள் களிமண் தானே?



18) நாம வெளிலே போகும்போது பூனை குறுக்கே போனுச்சுன்னா அதுக்கு என்ன அர்த்தம்?

?

?

?

?

பூனையும் எங்கியோ வெளிய போகுதுன்னு அர்த்தம்.



19) நபர்-1: “பஸ் ஸ்டாப்’ல நின்னுக்கிட்டு மேல பார்த்துக்கிட்டு இருக்கீங்களே... ஏன்?”

நபர்-2: “மதுரை போற பஸ் 2 மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க..அதுதான்”



20) அப்பா: செல்லம்! எங்க.. A B C D சொல்லு பார்ப்போம்...

மகன்: சரிப்பா! A E G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அப்பா: எங்க B F C D?

மகன்: அப்பா! அது என் ஸ்கூல் பேக்’ல இருக்கு!

/
/கலக்கல் தொடரும்.
/

5 comments:

Jaleela Kamal said...

ஹா ஹா சரியான நகைச்சுவை,

Jaleela Kamal said...

பூவுக்குள்... தேன்.

நெல்லுக்குள்... அரிசி.

கடலுக்குள்....முத்து.

மண்ணுக்குள்....வைரம்.

உன் மனச தொட்டு சொல்லு.....

உன் மண்டைக்குள் களிமண் தானே?

haa haaa

Mohan said...

வாங்க Mrs.Jaleela!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த கடைசி ஜோக்.........
ஹா.........ஹா............
புது சட்டை நல்லா இருக்கு.

Mohan said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!
//புது சட்டை நல்லா இருக்கு.//
ஊக்கத்திற்கு நன்றி!