Tuesday, February 1, 2011

மோசடி செல் சேவை/டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள்

நான் பீ.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு சிம் வைத்துள்ளேன். ஒரு நாள் திடிரென ஒரு மெசேஜ் வந்தது. நீங்கள் மொபைல் ரேடியோ சேவையில் சேர்ந்துள்ளீர்கள். அதற்காக மாத கட்டணமாக  19 ருபாய் பிடித்தம் செய்துள்ளோம் என்று. நான் எந்த மெசேஜ்ம் இது சம்பந்தமாக அனுப்பவில்லை. எப்படி இது சாத்தியம்? உடனே கால் சென்டருக்கு போன் செய்தேன். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட போராட்டங்களுக்கு பிறகு மறுநாள் கால் சென்டர் தொடர்பு கிடைத்தது. அவர்கள் இது சம்பந்தமாக நாங்கள் எதுவும் செய்ய முடியாது, உள்ளூர் பீ.எஸ்.என்.எல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள்.

நானும் ஒரு புகார் கடிதம் ஒன்றை தயார் செய்துகொண்டு உள்ளூர் பீ.எஸ்.என்.எல் அலுவலகம் சென்றேன். நீங்கள் உங்களை அறியாமலே ஏதாவது கீயை பிரஸ் செய்து இருப்பீர்கள், அதனால் உங்களுக்கு சப்ஸ்க்ரைப் ஆகி இருக்கும் என்றும்,  கழிக்கப்பட்ட 19 ருபாய் ஒன்றும் செய்ய முடியாது, இருந்தாலும் புகாரை பதிவு செய்து கொள்கிறோம் என்றும் சொல்லிவிட்டார்கள். புகார் கொடுத்ததற்கு எந்த ரெசிப்டும் கொடுக்க முடியாது என்றும், அடுத்த மாதம் இதே நாள் உங்களிடமிருந்து இந்த கட்டணம் பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் உங்கள் பிரச்சனை சரியாகிவிட்டது என்று மிகவும் பொறுப்பாக பதில் தந்தார்கள்.

என்ன கொடுமைங்க?!? இப்படி எத்தனை வாடிக்கையாளரிடம் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் கொள்ளை அடித்துகொண்டிருக்கிறார்கள்? என் சம்மதம் இல்லாமலேயே என் பாக்கெட்டிலிருந்து 19 ருபாய் கொள்ளை அடிப்பதற்கும், இந்த செயலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த பகல் கொள்ளைக்கு செல் சேவை நிறுவனங்கள் வேறு துணை போகிறதே? நாட்டில் எத்தனை படிப்பறிவு இல்லாத ஏழை வாடிக்கையாளர்களிடம் இது போன்ற நிறுவனங்கள் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்களோ தெரியவில்லை. என்னைப் போன்று இதை கவனித்து புகார் செய்யா விட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணமும் கொள்ளை அடிக்கப் படலாம். அடிக்கடி தேவை இல்லாத மெசேஜ் வந்து கொண்டிருக்கிறதே என்று படித்து பார்க்காமல் எந்த  மெசேஜ்ஐயும்  அழித்து விடாதீர்கள். உங்களுக்கு தெரியாமலே உங்கள் பணம் கொள்ளை அடிக்கப் படலாம்.


இத்தனைக்கும் நான் Do Not Disturb என்பதில் பதிவும் செய்து உள்ளேன். இதனால் ஒரு பயனும் இல்லை. தினமும் குறைந்தது 4, 5 தேவை இல்லாத மெசேஜ் வருகிறது. இந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ட்ராய் (TRAI Telephone Regulatory Authority of India) அதாவது தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம் என்ற அமைப்பில் இருந்து லைசன்ஸ் பெற்றே வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கிறது. எனக்கு வரும் மெசேஜ்ஐ பாருங்கள். இன்று இரவு 5 பெண்கள் உங்களிடம் சாட்டிங் செய்ய விரும்புகிறார்கள், விரும்பினால் SEND DOSTG TO xxxxx. இப்படியெல்லாம் மெசேஜ் வருகிறது. எத்தனை சபல எண்ணம் உடைய விடலைப் பையன்கள், ஆண்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இதெற்க்கெல்லாமா TRAI லைசன்ஸ் தருகிறது. டெலிமார்க்கெட்டிங்கிற்கு ஒரு வரைமுறை இல்லையா? போகிறபோக்கை பார்த்தால் இன்று இரவு பெண்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறோம், விரும்பினால் SEND DOSTG TO xxxxx என்று அனுப்பி வைத்தாலும் ஆச்சர்யப்பட வேண்டிஇருக்காது.

அடிக்கடி தேவை இல்லாத மெசேஜ் அனுப்பினால் லட்ச்ச கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளது. என்ன பிரயோஜனம்? டெலிமார்க்கெட்டிங்கிற்கு லைசன்ஸ் கொடுத்து விட்டு அவற்றை ட்ராய் தொடர்ந்து கண்காணிக்காததையே இது காட்டுகிறது.

இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு வைத்துள்ளது TRAI?
யாருக்கு தெரியும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்! செல்போன் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக ஆ(க்)கிவிட்டபிறகு இத்தனை தொந்தரவுகளுடன் அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையில் வேறு என்னதான் செய்வது? புலம்பிக்கொண்டே பயன்படுத்துவதைத் தவிர?!?

வாழ்க வளமுடன்!

5 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒன்னும் பண்ண முடியாது

Mohan said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒன்னும் பண்ண முடியாது//

ஆமாங்க! ஒன்னும் பண்ண முடியாது!!

இராஜராஜேஸ்வரி said...

எனக்கும் இந்த தொல்லைதான்.
போராடி சலித்துவிட்டது.
பொறுப்பற்ற ,உபயோகமற்ற பதில்கள்
தான் கிடைகின்றன.

Mohan said...

//Rajeswari said...

எனக்கும் இந்த தொல்லைதான்.
போராடி சலித்துவிட்டது.
பொறுப்பற்ற ,உபயோகமற்ற பதில்கள்
தான் கிடைகின்றன.
//
ஆமாங்க! பெரும்பாலானவர்களின் அனுபவம் இதுதான்!

Anonymous said...

இவனுக திருந்த மாட்டானுக பாஸ்