Wednesday, December 24, 2008

பப்ளிக்குட்டி செய்துவிடாதீர்கள் (நகைச்சுவை)

உங்களில் பலபேர் இந்த நகைச்சுவையை முன்பே கேள்விபட்டிருக்கலாம். இருந்தாலும் நகைச்சவை படங்களை நாம் பலமுறை பார்ப்பதுபோல் இதையும் நீங்கள் மீண்டும் படிக்கலாம்.

ஒரு இன்ஸ்பெக்டர்(கல்வி) ஒரு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் எலெக்ட்ரிசிட்டி என்பதை எலெக்ட்ரிகுட்டி என்கிறான். இன்ஸ்பெக்டர் ஆசிரியரைப் பார்க்கிறார். அவர் விடுங்க சார், அவன் கப்பாகுட்டி அவ்வளவுதான் என்றார். பின் தலைமை ஆசிரியரைப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். அவர் சாரி சார், இதை பப்ளிக்குட்டி பண்ணி விடாதீர்கள் என்றார்.

அதே இன்ஸ்பெக்டர் நொந்து நூடுல்ஸ் ஆகி அடுத்த வகுப்பறைக்கு சென்றார். அப்பொழுது ராமாயணம் நடத்திகொண்டிருந்தார் ஆசிரியர். ஆய்வாளர் ஒரு மாணவனிடம் தசரதனின் வில்லை யார் ஓடித்தர்கள் என்று கேட்டார். அவன் அழுது கொண்டே சத்தியமாக நான் ஒடிக்கவில்லை என்றான். ஆய்வாளர் வகுப்பாசிரியரைப் பார்த்தார். அவர் ஆமாம் சார் அவன் அப்படித்தான் செய்த குற்றத்தை எப்பவுமே ஒத்துகொள்ள மாட்டான் என்றார். உடனே தலைமை ஆசிரியர் ஆய்வாளரிடம் "விடுங்க சார், அந்த வில்லுக்குப் பதிலாக எவ்வளவு செலவு ஆனாலும் புதியதாக ஒரு வில்லை வாங்கிவிடலாம்" என்றார். அந்த ஆய்வாளர் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி விட்டார்.

உங்கள் பள்ளிக்கால நினைவுகளை கொண்டுவரும், நீங்கள் கீழே உள்ளதைப் படித்தால். ஒரு வரிக் கூட விடாமல் படிக்கவும்.























என்ன நண்பர்களே, மனம்விட்டு சிரித்தீர்களா?

4 comments:

Unknown said...

am nostalgic about my school days by reading your blog. thank u

மன்மதக்குஞ்சு said...

excellent. unlimitted laugh guaranteed

யூர்கன் க்ருகியர் said...

சிரிப்பூட்டியதற்கு நன்றி !!

Mohan said...

நன்றி அனு, மன்மதகுஞ்சு மற்றும் ஜுர்கேன் க்ருகேர், தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.