Friday, February 18, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 18-02-2011

இன்று (18-02-2011) நம் இந்தியாவில் விமான சேவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மென்மேலும் இந்த சேவை நல்லமுறையில் தொடர வாழ்த்துவோம்.

அப்புறம் ஒரு சின்ன தகவல்:-

இந்தியாவின் விமானப் போக்குவரத்து சகாப்தம் 18 பிப்ரவரி, 1911ஆம் ஆண்டு, ஹென்றி பைகுயட் ஒரு பிப்ளேனில் 8500 மெயில்களை எடுத்துகொண்டு அலகாபாத்திலிருந்து நைனிக்கு 6 மைல்கள் பறந்து  சென்றதில் தொடங்கியது.
*************************************************************

சென்சஸ் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9, 2011 தொடங்கி பிப்ரவரி 28, 2011 வரை  நடக்கிறது. தவறாமல் அனைவரும் தங்கள் தகவல்களை அளித்து, விடுபடாமல் இந்த கணக்கெடுப்பில் தங்களை சேர்த்துகொள்வதை  உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு, இந்த வலை தளத்தை பாருங்கள்.
http://www.census.tn.nic.in/
http://www.censusindia.gov.in/

*************************************************************

சமீபத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியது உங்களக்கு தெரியும். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்திய விதம் கொஞ்சம் மனதை நெருடியது. அதாவது தங்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த அவர்களுக்கு எப்படி
மனம் வந்தது எனத் தெரியவில்லை. மாட்டின் ரத்தம்தான் பாலாக மாறி வருவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டப் பாலை வீணாக சாலையில் கொட்டுவதைத் தவிர்த்து வேறு வகையில் போராடி இருக்கலாமோ என ஆதங்கப்பட வேண்டியதை யாரும் மறுக்கமுடியாது என நினைக்கிறேன்.
*************************************************************

செல்போனின் கதிர்வீச்சு நமது உடல்நலத்தை பாதிப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதைபற்றிய எந்த விழிப்புணர்வு பிரச்சாரமும் எந்த விதத்திலும் இதுவரை வரவில்லை. மாறாக பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள்நடந்து கொண்டே பேசுங்கள், இரவு முழுவதும் பேசுங்கள் என்று மூளை சலவை செய்து கொண்டுதான் விளம்பரம் வருகிறது. இதற்கு  காரணம் பலவாக இருந்தாலும் , பல்லாயிரக்கணக்கான கோடிகள் சம்பந்தப்பட்ட வியாபாரம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். எனவே அதைப்பற்றி எதையும் எதிர்பார்க்காமல் நம் நலத்தை நாம் காத்துகொள்வதே உத்தமம். எந்த இடத்தில் எல்லாம் லேன்ட்லைன் இருக்கிறதோ அங்கெல்லாம் செல்போனைத் தவித்து, லேன்ட்லைன்'ஐ பயன்படுத்துங்கள். உங்கள் உறவினர்/நண்பர் வீட்டில் லேன்ட்லைன் இருந்தால் பெரும்பாலும் அதிலேயே தொடர்பு கொண்டு அவர்கள் உடல் நலத்தை பேணுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் செல்போனை உபயோகிக்கலாம். குறிப்பாக செல்போனை குழந்தைகள் உபயோகிப்பதை அடியோடு தவிர்ப்பது நலம்.

*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....
ஒரு குடிகார கணவன் குடித்துவிட்டு தன்னுடன் ஒரு பூனையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறான்.  "இங்கே பார்! ஒரு பெரும் காட்டுக் கரும்  குரங்கு!" என்றான்.
மனைவி சிரித்துக்கொண்டே "ஐயோ... இது குரங்கு இல்லை. பூனை!" என்றாள்.
அதற்கு  கணவன் சொல்கிறான்...
 "
நான் உன்னிடம் பேசவில்லை, இந்த பூனையிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்!"
 
*************************************************************

வாழ்க வளமுடன்!

6 comments:

Rajan said...

NICE ONE

Rajan said...

ARUMAIYANA COFFEE.

Unknown said...

"நான் உன்னிடம் பேசவில்லை, இந்த பூனையிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்!"

மப்பிலும் அவன் தெளிவாய்தான்யா இருக்கிறான்.

Mohan said...


வாங்க Rajan!
வாங்க கே. ஆர்.விஜயன் !
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
வாழ்க வளமுடன்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஜனரஞ்சகமான தொகுப்பு மோகன்.
பகிர்விற்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

"நான் உன்னிடம் பேசவில்லை, இந்த பூனையிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்!"//
ரொம்பத்தான் தெளிவு.