Thursday, June 30, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 30-06-2011


இந்த ஜூலை 2001 மாதத்திற்கு சில சிறப்புகள் உள்ளதாம். ஒரு மெயில் வந்தது.
1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11  இது போல் தேதிகள் வருகிறது.
மேலும் இந்த மாதத்தில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் வருகிறதாம். இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருமாம். இதை சீனர்கள் Money Bags என்று அழைப்பார்களாம்.

உங்கள் வயதுடன், நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களை கூட்டினால் 111 என்று வருமாம். இது உலகில் பிறந்த எல்லோருக்கும் பொருந்துமாம். இதைதான்  Year of Money என்கிறார்கள்.
இந்த செய்தியை நம் நண்பர்களுக்கு தெரிவித்தால் நான்கு நாட்களுக்குள் நமக்கு பணம் வருமாம். இல்லை என்றால் நாம் பணம் இல்லாமல் இருப்போமாம்.
(
பய புள்ளைங்க எப்படியெல்லாம் பயப்படுத்துதுன்னு பாருங்க....)
*************************************************************

கல்வியில் அரசியலை புகுத்தியது மிகுந்த வேதனை அளிக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களது போட்டியில் நம் குழந்தைகள்தானே பாதிக்கப் படுகிறார்கள், அவர்கள் குழந்தைகள் அல்லவே?!? ஒருவேளை பழைய பாடத் திட்டம் என்று தீர்ப்பு வந்தால் புத்தகம் கிடைக்க ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும். இரண்டு மாத படிப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது? எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி தமிழ் நாட்டு தலை எழுத்தை தெளிவாக விளக்கி விடுகிறது. நீங்களே பாருங்கள்.

அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் சண்டை...
விவாகரத்து.
தீர்ப்பு...
அப்பாவிடம்
5 வருடம்
அம்மாவிடம்
5 வருடம்
தவிக்கும் குழந்தையின்
பெயர்
தமிழ்நாடு

*************************************************************

பூண்டு (சமைக்காதது), எலுமிச்சை சாறு போன்றவை நம் உடலுக்கு பல நன்மைகள் தருவது உங்களுக்கு தெரியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இந்த இரண்டையும் நம் பல்லில் நேரடியாக படாமல் உட்கொள்வது நம் பல்லுக்கு பாதுகாப்பானது, ஏனெனில் இவை பல் எனாமலை பதம் பார்த்து விடும். கவனம்.......


*************************************************************

தமிழ் நாட்டு மாணவர்களா.....கொக்கா....
ஹி..ஹி... கீழே உள்ள படங்களை க்ளிக் செய்து பெரிதாக்கி படித்துப் பார்க்கவும். உங்களுக்கே புரியும்.......








 
*************************************************************
நகைச்சுவைப் பக்கம்.....

டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்.
டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.
டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.
டீச்சர்: ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.
டீச்சர்: டேய்..ஸ்டுபிட்... உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பாக்குராறு?
பையன்: பேர குழந்தைகள்
டீச்சர்: ஐயோ.. உன் வாழ்கையின் லட்சியம்தான் என்ன?
பையன்: நாம் இருவர் நமக்கு இருவர்....
டீச்சர்: ?!?..............

*************************************************************

வாழ்க வளமுடன்!
 

4 comments:

மதுரை சரவணன் said...

pala seithikal... thamilakam kuriththa kavithai arumai... antha kaditham manathai urukkukirathu.... pakirvukku vaalththukkal

JesusJoseph said...

school paper comedies are very good


நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

வேலன். said...

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை...
அருமையான கருத்து்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Mohan said...

@ மதுரை சரவணன்
@ JesusJoseph
@ வேலன்.
தங்கள் அனைவரின் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!
வாழ்க வளமுடன்!!