Showing posts with label வழிகாட்டி. Show all posts
Showing posts with label வழிகாட்டி. Show all posts

Sunday, July 31, 2011

லோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா?


வாங்க...வாங்க... அப்ப அவசியம் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது.

லோன் தவணை(Due) முடிந்தவுடன் நீங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள். உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பேப்பரில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர் ஆக முடியும். மறவாமல் இன்சூரன்ஸ் பேப்பரிலும் இந்த ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வண்டிக்கு ஏதேனும் இன்சூரன்ஸ் பெற வேண்டிய சூழ்நிலை வந்தால் பணம் உங்கள் பெயருக்கு வரும், இல்லை எனில் நீங்கள் லோன் பெற்ற வங்கிக்கு பணம் சென்று விடும்.

சரி இப்போது இதை எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போம்.

1) நீங்கள் கடனை முழுவதுமாக செலுத்தி 15 நாட்களுக்குள் உங்கள் வங்கியிலிருந்து NOC (No Objection Certificate) மற்றும் FORM-35 இந்த இரண்டும் தலா இரண்டு காப்பிகள் உங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி  அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பாவிட்டால் உடனடியாக தொடர்பு கொண்டு இந்த இரண்டையும் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.

2) உங்கள் வண்டிக்கு புகை கட்டுபாடு அலுவலகத்தில் ஒரு செர்டிபிகட் வாங்கி கொள்ளுங்கள். இது உங்கள் வண்டி, அரசு நிர்ணயித்துள்ள அளவின் படியே புகையை சுற்று சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வெளிவிடுகிறது என்பதை உறுதி செய்யும்.

3) மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இரண்டு FORM-35 மற்றும் ஒரு NOC காப்பியை, உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’யும் எடுத்துக்கொண்டு RTO அலுவலகம் சென்று ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டியதற்கு உண்டான தொகையை செலுத்திவிட்டு அந்த அலுவலகத்திலேயே கொடுத்து விடுங்கள்.

4) உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கி சான்றளித்து, ஒரிஜினல் மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இந்த இரண்டையும் உங்களிடம் கொடுத்து விடுவார்கள்.
இப்போது உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கம் செய்தாயிற்று. இப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர். 

சரி இப்போது உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் செர்டிபிகட்’ல் எப்படி  ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும் என்று பார்ப்போம்.

1) உங்கள் வண்டியின் ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் செராக்ஸ் பேப்பர், ஒரு NOC copy இவற்றோடு ஒரு விண்ணப்பத்தை எழுதி இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பவும்.

2) இன்சூரன்ஸ் அலுவலத்தில் இருந்து ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற புதிய இன்சூரன்ஸ் பாலிசி அனுப்பி வைப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இப்போதுதான் உங்கள் வேலை முழுமை அடைந்ததாக அர்த்தமாகும்.

குறிப்பு: NOC யின் ஆயுட்காலம் மூன்று மாதங்கள்தான். அதற்குள் இந்த வேலைகளை நீங்கள் முடித்து விடவேண்டும். இல்லையெனில் கட்டணம் செலுத்தி வங்கியிலிருந்து மீண்டும் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.

எனவே லோன் தவணை (Due) முடிந்தவுடன் உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசியில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்கம் செய்துகொண்டு தேவை இல்லாத டென்ஷனை தவிர்த்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

Tuesday, August 3, 2010

புத்தகம் வாசிக்கும்/நேசிக்கும் பழக்கம்

இப்பொழுதெல்லாம் நான் பிறந்த நாள், திருமணம் போன்ற விஷேசங்களுக்கு பரிசாக  சுய முன்னேற்ற/சிந்தனை புத்தகத்தை பரிசாக கொடுத்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை  அதிக செலவு செய்து பரிசுப்பொருள் கொடுப்பதை  விட, குறைவான செலவே ஆனாலும் புத்தங்களை பரிசாக கொடுப்பதையே திருப்தியாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்களின் அடுத்த தலை முறைக்கும் இந்த புத்தகம் இருக்கும், பயனுள்ளதாகவே அமையும். எல்லோரும் கொடுக்கும் கடிகாரங்கள், ஓவியங்கள், சிலைகள், பாத்திரங்கள் போன்றவற்றை நீங்களும் ஏன் பரிசாக கொடுக்க வேண்டும்? அவை எல்லாமே அவர்களிடமே இருக்கும்... புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர் கூட சரி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என படிக்க நினைப்பார்கள், அப்படியே அவர்களிடம் அந்த படிக்கும் பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லாவா? 
 


பெரும்பாலும் யாரும் பாடப் புத்தககளை/வார இதழ்களை  தவிர மருந்துக்கும் கூட வேறு எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை.  அவர்கள் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், இந்த பழக்கம் ஒன்றே நம்மை சிந்திக்க வைக்கும், நமது வாழ்க்கையை ஒரு நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வழியைக் காட்டும். எந்த சிந்தனையும், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் "வெந்ததைத்  தின்று விதி வரும் போது சாவேனே"  என்று வாழ்வது  ஒரு வாழ்க்கையே இல்லை. பின் ஆறு அறிவு பெற்ற மனித வாழ்க்கைக்கும்ஐந்து அறிவு பெற்ற விலங்கு வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கடமைக்கு படிக்காமல் தினம் 5, 6 பக்கம் படித்தாலும் உணர்ந்து படிக்க வேண்டும்.  படித்ததை, அதில் உள்ள நல்லவற்றை நம் வாழ்வில் முடிந்த வரை கடைப்பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் கடைப்பிடிக்க முயற்சியாவது செய்ய வேண்டும். சொல்வது எளிது, ஆனால் சொல்லியதை கடைப்பிடிப்பது கடினமே... அதனால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நாளடைவில் அதை கடைப்பிடிப்பது எளிதாகிவிடும்.

நமது பெரும்பாலான ஓய்வு நேரங்களை T.V பார்ப்பதிலேயே செலவழித்து விடுகிறோம். பின் சிந்திக்க என்ன வழி? உலக நடப்புகளை, நல்ல விசயங்களை, தகவல்களை பின் எப்படிதான் தெரிந்து கொள்வது?. ஒரே வழி, Reading habits அதாவது புத்தகம், செய்திதாள்கள்  படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது. நல்ல விசயங்களை, பழக்கங்களை சொல்வதும், செய்வதும், கேட்பதும் இந்தக் காலத்தில் கேலி செய்யப்படுகிறது, வெட்கப்பட வேண்டி இருக்கிறது, கூச்சப் பட வேண்டி இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் எல்லோர் முன்னிலையிலும் பார்க்க வெட்கப்பட வேண்டிய காட்சிகளை கொஞ்சம் கூட சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் T.Vயிலும், சினிமாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உண்மையில் எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல், நல்லவற்றை செய்வதற்கு வெட்கப்படுகிறோம் என்ன நண்பர்களேநான் சொல்வது சரிதானே?!? அதனால் அந்த கேலிக் கூச்சல்களை கண்டு கொள்ளாமல் நல்லவற்றை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

நூறு சதவீதம் யாரும் இங்கே Perfect இல்லை. எல்லோரும் தவறு செய்பவர்களே. இதில் யாரும் விதி விலக்கல்ல.  எல்லோருக்குள்ளும் மனிதமும், மிருகமும் இருக்கிறது. இதில் எதை அதிகமாக வெளியே விடுகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். நாம் செல்லும் பாதை, செய்யும் செயல், பேசும் பேச்சு எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறதா என்பதை சிந்தனை செய்ய, யோசிக்க புத்தகம் ஒரு வழி காட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவை இல்லை. இதன் மூலமே நாம் நம்முள்ளிருக்கும் மிருகத்தைக் கொன்று, மனிதத்தை  வளர்க்க முடியும்.  இங்கே சொல்வது Bore அடிப்பது போல் இருந்தாலும் சிறிது சிந்தித்து நடந்தால் நம் வாழ்க்கை நலமாகவே/வளமாகவே அமையும் என நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?

சமீப காலங்களில் எல்லா விசேஷங்களிலும் எல்லா நண்பர்களுக்கும் நான் புத்தககங்களையே பரிசாகக் கொடுக்கிறேன். இதையேத்தான் இனியும் செய்யப் போகிறேன். நீங்களும் யாருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் இதையே செய்யலாம்,_உங்களுக்கும் இது உடன்பாடு எனில்...

இபோது கூட ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 முதல் 10-08-2010 ஆகிய பனிரெண்டு நாட்களுக்கு நடக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் சென்று வாருங்கள்.....


வாழ்க வளமுடன்!              
      

Wednesday, June 16, 2010

படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம்....

பத்தாம் வகுப்பிலுருந்து தொடங்கி ஒவ்வொரு படியாக மேற்கொண்டு என்ன படிக்கலாம், என்ன மாதிரியான தேர்வு எழுதி என்ன மாதிரியான வேலையை தெரிவு செய்யலாம் என்பது வரை ஒரு முழுமையான ப்லோ சார்ட்... உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர் பிள்ளைகளுக்கு இதை
அவசியம் தெரிவித்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்....

என் மெயிலுக்கு வந்ததை இங்கே உங்கள் பார்வைக்காக.....

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி காணுங்கள்...



 
வாழ்க வளமுடன்!