Thursday, February 12, 2009

கடவுள் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறார்!

ஒரு சமயம் ஒரு நபர் கடவுளிடம் ஒரு மலரையும் வண்ணத்துப் பூச்சியையும் வேண்டினார். ஆனால் கடவுள் அந்த நபருக்கு ஒரு கற்றாளையும், கம்பளிப் பூச்சியையும் அளித்தார். அந்த நபருக்கோ மிகவும் வருத்தம். அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை ஏன் தான் கேட்டதற்கு மாறாக கடவுள் அளித்தார் என்று. பின் கடவுளுக்கு அதிகமான மக்களை காக்கும் பொறுப்பு இருக்கும் என்பதால் அவரை எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த நபர் கடவுள் வழங்கிய கற்றாளையும், கம்பளிப் பூச்சியையும் பார்க்க சென்றார். என்ன ஆச்சரியம்! அந்த அருவருப்பான, முட்கள் நிறைந்த கற்றாளையிலிருந்து ஒரு அழகிய வண்ண மலர் பூத்திருந்தது. மேலும் அந்த காணச்சகிக்காத கம்பளிப் புழு ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறியிருந்தது.

ஆம். கடவுள் எப்போதும் நமக்கு சரியானவற்றையே செய்கிறார். நமக்கு தவறாக தோன்றினாலும் கடவுளின் பாதை எப்போதும் மிகச் சரியாகவே இருக்கிறது.

நீங்கள் கடவுளிடம் ஒன்று கேட்டு, அவர் வேறு ஒன்று கொடுத்தால் நம்புங்கள் அவரை!

நமக்கு தேவையானவற்றை மிகச் சரியான நேரத்தில் எப்போதுமே கடவுள் அளிப்பார்.

நாம் என்னவெல்லாம் விரும்புகிறோமோ அவை எல்லாமே நமக்கு தேவையானதாக இருக்காது.

கடவுள் எப்போதுமே நம் குறைகளை நிவர்த்திக்கத் தவற மாட்டார். எனவே அவரை எந்தவித சந்தேகமும், முணுமுணுப்பும் இல்லாமல் நம்பிக்கையுடன் தொடருங்கள்!

இன்று முட்களாக இருப்பது நாளை மலராக ஆகிவிடும்!

எவர் தன்னை முழுமையாக கடவுளிடம் நம்பிக்கையாக ஒப்படைத்து விடுகின்றனரோ அவர்களுக்கு கடவுள் எப்போதும் மிகச் சிறந்தவற்றையே அளிப்பார்.

No comments: