Wednesday, April 8, 2009

நகைச்சுவை தொகுப்பு - 2

ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்!
மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா?

மின்னலப் பார்த்தா கண் போய்டும்!
பார்க்கலேன்னா?
வேறென்ன? மின்னல் போய்டும்....

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?
ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?
மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்!

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

அப்பா (தன் நான்கு வயது மகனிடம்) : உனக்கு தம்பி பாப்பா வேணுமா? இல்ல தங்கச்சிப் பாப்பா வேணுமா?
மகன்: எனக்கு உங்க தங்கச்சியோடப் பாப்பாதான் வேணும்!

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!

ரெண்டு பேர் ஒற்றுமையா இருக்கிறது எனக்குப் பிடிக்கவில்லை!
ச்சே! நீயெல்லாம் ஒரு மனுசானாயா? ஏன் உனக்குப் பிடிக்கல?
யோவ்! திருடனும், போலீசும் ஒற்றுமையா இருந்தா எப்படியாப் பிடிக்கும்?

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?
மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த படம்தானாம் அது....

என்ன ஆபரேஷன் தியேடேர் வாசலில் மாலை தொங்குது?ஆபரேஷன் ஸக்ஸெஸ்நா டாக்டருக்கு, இல்லேனா பேசண்டுக்கு!

கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?
மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு... அதான் கேட்டேன்.

17 comments:

ரொம்ப நல்லவன் said...

ஹாஹாஹா...

சென்ஷி said...

நல்லாயிருக்குது. :)

Mohan said...

வாங்க jchat !
வாங்க சென்ஷி!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!

சாதாரணன் said...

ரொம்ப நல்லாருக்கு.

Mohan said...

//சாதாரணன் said...
ரொம்ப நல்லாருக்கு.
//

வாங்க சாதாரணன்!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!

வெட்டிப்பயல் said...

//மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?
ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?
மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்!//

இதை ரொம்ப ரசிச்சேன் :-)

Mohan said...

//வெட்டிப்பயல் said...
//மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?
ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?
மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்!//

இதை ரொம்ப ரசிச்சேன் :-)
//

வாங்க வெட்டிப்பயல்!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!
அடிக்கடி வந்து போங்க...

Unknown said...

Good Jokes

Mohan said...

//arunkumar.v@sify.com said...
Good Jokes
//
வா அருண்! தேங்க்ஸ்...

Subankan said...

ரசித்தேன்.சூப்பர் :)

டவுசர் பாண்டி said...

யப்பா !!! தொரெ, வாஜாரே...

எனுக்கு வவுத்து நோவு வர்ற மேரி கீதுபா !!! (சிர்ச்சி,சிர்ச்சி )

சோக்கு, ஒண்ணுன்னும் சும்மா தூள் டாக்கர்ஸ்
தான் போ !!!

எவ் வவுத்து நோவுக்கு நீ தான் பதில் சொல்லணும் சொல்டேன். அக்காங் !!!

mohanpuduvai said...

All are Good Jokes.

Joe said...

ஹா ஹா ஹா!

Mohan said...

வாங்க Subankan!
வாங்க mohanpuduvai!
வாங்க Joe!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!
அடிக்கடி வந்து போங்க...

Mohan said...

வாங்க டவுசர் பாண்டி.!
வூட்டாண்ட அல்லாரும் சௌகியமாபா!
பாலோயர்ஸ் லிஸ்ட்ல சேர்ந்ததுக்கு ரொம்ப டான்க்சுப்பா!

Unknown said...

wow super

Unknown said...

pudhidhaga thevai