Monday, August 30, 2010

உயிர் காக்க உதவுங்கள்....

இந்த செய்தி 29-08-2010 ஞாயிறு அன்று ஒரு நாளிதழில் வெளியானது. ஒரு ஏழைக் குழந்தையின் சிறு நீராக கோளாறின் பொருட்டு வரும் செப்டம்பர் 10ம் தேதி அன்று   அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் போலிருக்கிறது.  படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்...
 போன் செய்து விசாரித்தேன்.  கலைஞர் காப்பீடு திட்டத்தை தாண்டியும் அவர்களுக்கு பண உதவி தேவைபடுவதாக அறிந்தேன். அவர்கள் கொடுத்த விளம்பரத்தில் வங்கி எண் தரவில்லை. நான்தான் கேட்டு வாங்கினேன். என்னால் முடிந்ததை அனுப்பி விட்டேன்.  வங்கி கணக்கு விபரங்களை இங்கே தருகிறேன்.

பெயர்: K. கவிதா
வங்கி எண்: 444602010105205     IFSC Code: UBIN0544469
வங்கி பெயர்: Union Bank Of India, Karur. Tamil Nadu.
 (விளம்பரத்திலும், வங்கியிலும் இந்த சிறுமியின் இன்சியல் வேறுபட்டு இருப்பதை நான் விசாரித்து தெளிவுபடுத்தி கொண்டேன். எனவே யாரும் இது சம்பந்தமாக அவர்களை கேட்டு தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.)

இதைபார்த்து யாருக்கேனும் உதவ மனம் இருந்தால் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் எனக்கு உறவினரோ அல்லது தெரிந்தவர்களோ அல்ல. எதோ இந்த பதிவில் போட்டு யாரேனும்
உதவி செய்தால் அந்த சிறுமிக்கு பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் மட்டுமே இங்கே பதிவிட்டுள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் அந்த சிறுமியை காப்பாற்ற பிரார்த்திப்போம். 
வாழ்க  வளமுடன்!

5 comments:

Ramesh said...

செய்தியைப் படித்தேன்..நண்பரே...வலையுலகில் பல்வேறு உலகத்தமிழர்கள் உதவும் உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்...நிச்சயம் அந்தச் சிறுமிக்கு அனைவரும் உதவுவார்கள்...நல்லது நடக்கும் என நம்புகிறேன்..நானும் உங்களது பதிவினை...என்னால் இயன்ற நபர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்....நிச்சயம் உதவுவார்கள்....

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_30.html

சைவகொத்துப்பரோட்டா said...

நம்மால் முடிந்த உதவியினை செய்வோம்.

Mohan said...

வாங்க பிரியமுடன் ரமேஷ்!
உங்கள் உடனடி செயலுக்கு மிக்க நன்றி!

வாங்க சைவகொத்துப்பரோட்டா!
கண்டிப்பாக செய்வோம்!

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நல்ல பணி.சிறக்கட்டும்.நானும் பங்குகொள்கிறேன்.நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

Mohan said...

வாங்க சே.வேங்கடசுப்ரமணியன்!
ரொம்ப நன்றிங்க!